Home CINEMA NEWS வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் “சூர்யா41” படக்குழு…!!! நெகிழ்ச்சியான சம்பவம்.

வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் “சூர்யா41” படக்குழு…!!! நெகிழ்ச்சியான சம்பவம்.

suriya

சினிமா படப்பிடிப்புக்காக அமைக்கப்படும் வீடுகளை வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வழங்க சூர்யா 41 படக்குழு முடிவெடுத்து இருப்பது சமூக வலைத்தளங்களில் பாராட்டை பெற்று வருகிறது. நடிகர் சூர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலா உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இன்னும் படத்திற்கு தலைப்பு வைக்காததால் சூர்யா 41 என அழைக்கப்படுகிறது. இந்த படத்தில் சூர்யா மீனவராக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் மற்றொரு நாயகியாக மலையாள நடிகை மமிதா பைஜு நடிக்கிறார்.

இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்காக அமைக்கப்படும் குடிசை வீடுகளை படப்பிடிப்பு முடிந்தவுடன் அப்பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வழங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆகையால் சூர்யா மற்றும் அவரது படக் குழுவினரும் இணைந்து ஆதரவற்றவர்களுக்கு வீடு வழங்க திட்டமிட்டு இருப்பது அவரது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

Exit mobile version