வர்ஷா நாயர் சூரரை போற்று படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கூலர் ஒன்றை அணிந்து கொண்டு செம ஸ்டைலாக விமானத்திலிருந்து இறங்கி நடந்து வந்த பெண். இவர் வருவது அந்த ஒரு நிமிடம் என்றாலும் இவருக்கு மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்தது.
யார் இந்த பெண் என்று ரசிகர்கள் இணையத்தில் தேட ஆரம்பித்தார்கள். அதன் பின்தான் தெரிந்தது வர்ஷா நாயர் உண்மையிலே விமானம் ஓட்டும் விமான பைலட் என்று, பிரபல நிறுவனத்தின் விமானம் ஒன்றை ஓட்டி வருகிறார்.
சூரரைப் போற்று படத்தில் விமான பைலட்டாக நடிக்க ஒரு பெண் தேவைப்பட்டதாம் அந்த படத்தின் உதவி இயக்குனர் வர்ஷாவின் நண்பராம் உடனே பைலட் வர்ஷாவை தொடர்பு கொண்டு இந்த கதாபாத்திரத்தில் ரியல் பைலட் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அணுகினாராம். அதற்கு வர்ஷா யோசனை செய்துவிட்டு ஒப்புக் கொண்டாராம். இப்படிதான் சூரரைப்போற்று படத்தில் ரியல் பைலட் வர்ஷா வந்தது.
வர்ஷாவிற்கு சினிமாவில் அசோக் செல்வன் மற்றும் கருணாகரன் அனைவரும் நண்பர்கள். வர்ஷா வசிக்கும் அதே அபார்ட்மெண்டில் தான் அசோக் செல்வனும் வசித்து வருகிறாராம்.
தற்பொழுது வர்ஷா தனது பணியில் பிஸியாக இருக்கிறார். ஓய்வே இல்லாமல் பறந்துகொண்டிருக்கும் வர்ஷா தனக்கு ஓய்வு கிடைக்கும் பொழுது ஒரு சில போட்டோ ஷூட் செய்துள்ளார். வர்ஷாவின் லேட்டஸ்ட் போட்டோ சூட் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது இந்த புகைப்படம்.