சினேகா ஒரு நேரத்தில் சினேகா போல தான் பெண் வேண்டுமென்று பார்த்த மாப்பிள்ளைகளும் இருக்கிறார்கள் சினேகா மாதிரி மருமகள் வர வேண்டும் என்று தவம் கிடந்த மாமியார்களும் இருக்கிறார்கள் அந்த அளவிற்கு ஹோம்லியான முகத் தோற்றத்தை கொண்ட சினேகாவிற்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளம்.
பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் என்ற பாடலில் ஆரம்பித்து சேரனின் ஆட்டோகிராப் படத்தில் ஒவ்வொரு பூக்களுமே வரை சினேகாவின் அக்மார்க் ஹிட் பாடல்கள் நிறைய உள்ளது.
சினேகாவின் நிஜப்பெயர் சுகாசினி நாயுடு சினிமாவிற்காக தனது பெயரை சினேகா என்று மாற்றி கொண்டார். சினேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து வந்தார். முதலில் ஸ்ரீகாந்த் அவர்களை சினேகா காதலித்து வருகிறார் என்று கிசுகிசு வெளிவந்தது ஆனால் அந்த செய்தி கிசுகிசுவாகவே போனது.
சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள் அப்போது இருவருக்கும் நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் சினேகா பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது சினேகாவிற்கு ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் உள்ளது.
சினேகா தனது மகள் ஆத்யந்தா பிறந்தநாளை பிரம்மாண்டமாக தனது குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் தற்பொழுது புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.