Home NEWS மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த சிவசங்கர் பாபாவிற்கு சிறையில் திடீர் உடல்நலக்குறைவு ..!!!மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த சிவசங்கர் பாபாவிற்கு சிறையில் திடீர் உடல்நலக்குறைவு ..!!!மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

sivashankar baba admitted in stanley hospital

சிவசங்கர் பாபா தன்னைத் தானே கடவுள் என்று கூறிக்கொண்டு பெரிய பக்தர் கூட்டத்தையே கையில் வைத்திருந்தார். பாபா சொல்வதே சரி என்று நம்பிய ஒரு கூட்டமும் உள்ளது. தன்னை தானே கடவுளின் அவதாரம் என்று கூறிக் கொண்டு வரும் பக்தர்களை தன்வசப்படுத்திக் கொண்டு தனது காலத்தை கழித்து வந்த சிவசங்கர் பாபா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு பின்புறம் 65 ஏக்கரில் ஆசிரமம் கட்டி வந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுகில் இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் முன்வைத்த புகாரின் பேரில் ஆரம்பமானது விசாரணை. தொடர்ந்து விசாரித்ததில் அந்த பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சிவசங்கர் பாபா கொடுத்ததாகவும் நான் கிருஷ்ணன் என்று கூறி மாணவிகளை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளதாகவும், தவறான செயல்களிலும் எடுப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் புகார்களை தொடர்ந்து அளித்து வந்ததால் சிவசங்கர் பாபா அவர்களை போலீசார் தேடி வந்தனர் மாறுவேடத்தில் மொட்டை அடித்துக்கொண்டு சிவசங்கர் பாபா தலைமறைவாகி இருந்தார். அதன் பின் தனிப்படை ஒன்றை அமைத்து சிவசங்கர் பாபாவை டெல்லி அருகே கைது செய்தனர் போலீசார் அதன் பின் விசாரணைகள் நடத்தி சிவசங்கர் பாபாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிவசங்கர் பாபா மீது 5 போச்சு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவசங்கர் பாபா அவர்களுக்கு நேற்று காலை திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.

உடல்நலக்குறைவினால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கர பாபாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள் மருத்துவர்கள்.

தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்.

Exit mobile version