Home NEWS மொட்டை அடித்து கொண்டு எஸ்கேப் ஆக நினைத்த சிவசங்கர் பாபா போட்டுக்கொடுத்த பெண் பக்தர்..!!!

மொட்டை அடித்து கொண்டு எஸ்கேப் ஆக நினைத்த சிவசங்கர் பாபா போட்டுக்கொடுத்த பெண் பக்தர்..!!!

Sivashankar baba

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தப்பிச்சென்ற கேளம்பாக்கம் சாமியார் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீஸார் டெல்லியில் நேற்று கைது செய்தனர். அவரை நேற்று இரவு விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியை தன்னை ஆன்மீக குருவாக கூறிக்கொள்ளும் சிவசங்கர் பாபா நடத்திவருகிறார். அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மூன்று மாணவியர் புகார் அளித்தனர். பள்ளி நிர்வாகத்தினர் சிலர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி சிவசங்கர் பாபா மீது போக்சா உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். பாலியல் தொல்லை தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கிடைக்காததால் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க குடியுரிமை அதிகாரிகளிடம் “லுக் அவுட்” நோட்டீஸ் அளித்தனர். இந்நிலையில் உடல் நலக்குறைவு எனக்கூறி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவசங்கர் பாபாவிடம் விசாரிக்க காவல்துறையினர் சென்றனர். சிபிசிஐடி போலீசார் வருவதை அறிந்த அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு தப்பினார்.சிவசங்கர் பாபாவிற்கு டெல்லியில் உள்ள பெண் பக்தர் உதவி செய்தாக தகவல் வெளியாகியுள்ளன. அந்த பெண்
பக்தரின் போனின் நம்பரை சிபிசிஐடி ட்ராக் செய்து பாபா இருக்கும் இடத்தை கண்டறித்ததாக கூறப்படுகிறது.

சிவசங்கர் பாபா பெண் பக்தர் வீட்டில் இருந்தபோது அவரை போலீசார் நேற்று கைது செய்தனர் அவர் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார் டேராடூன் விரைந்த தனிப்படை போலீசார் சிவசங்கர் பாபா விமானம் மூலம் நேற்று சென்னை அழைத்து வந்தனர். முறைப்படி நீதிமன்ற ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அப்போது அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் சிலரும் கைது செய்யப்படலாம் என சிபிசிஐடி போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version