Home CINEMA NEWS ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஒரு அடி அடிச்சி என்ன குப்புறத்தள்ளி ஓங்கி குத்திட்டான் –...

ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஒரு அடி அடிச்சி என்ன குப்புறத்தள்ளி ஓங்கி குத்திட்டான் – சிவகுமார்

sivakumar about jaibhim

சிவக்குமார் எப்பேர்ப்பட்ட நடிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் இருந்த காலத்தில் சிவகுமார் அவர்களும் ஹீரோவாக படத்தில் நடித்தவர். விஜய் அஜித் மற்றும் முன்னணி நடிகர்க்கெல்லாம் தந்தையாக நடித்தவர்.

சினிமா இண்டஸ்ட்ரியில் சிவக்குமாரை பற்றி கேட்டால் நல்ல மனிதர் எந்த ஒரு கெட்ட பழக்கமும் அவருக்கு கிடையாது அதுபோல அவருடைய இரு மகன்களையும் நன்றாக வளர்த்துள்ளார் என்று கூறுவார்கள். அதிகாலை விடியலுக்கு முன் எழுந்து யோகா செய்து தனது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் பழக்கத்தை இன்றும் தொடர்ந்து வருகிறாராம் சிவகுமார்.

சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட சிவகுமார் தன்னுடைய குடும்ப சூழல் பற்றி பேசி இருந்தார் அதில நான் ஒன்னும் பெரிய ஆள் எல்லாம் கிடையாது கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து சென்னைக்கு வந்தேன் சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்பட்ட காலங்கள் எனக்கு இருந்துள்ளது. கஷ்டப்பட்டு என்னை சென்னைக்கு படிக்கச் அனுப்பினார் என்னுடைய தாய் என்று கூறினார்.

சூரியா காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் என் வயதில் நானும் சூர்யா போல இருந்திருந்தால் காதலித்து இருப்பேன் அப்போது சோத்துக்கு வழி இல்லையே எனக்கு அந்த வயதில் பல கஷ்டங்களை சந்தித்தேன் என்று கூறிய அவர் விலைவாசி ஏற்றத்தை பற்றியும் கூறியிருந்தார் முன்பெல்லாம் கொஞ்சம் பணம் இருந்தால் அனைவரும் நிம்மதியாக சாப்பிடலாம் ஆனால் தற்பொழுது சூர்யா குடும்பம் மதிய உணவிற்கு சென்று வந்தாலே 15 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

ஜெய்பீம் படத்தைப் பற்றி பேசிய சிவக்குமார் ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் என்னுடைய மகன் போல. உலகத்திலேயே முதல் முறையாக ஒரு படத்தை பார்த்துவிட்டு முதல்வர் புகழ்ந்தது மட்டுமல்லாமல் குறவர்கள் இருளர்கள் என அமைப்பினர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு நான் நல்லது செய்ய வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அனைவருக்கும் செய்தி கொடுத்து குறவர்கள் இருளர்கள் அமைப்பின் லிஸ்ட் எடுத்து தற்போது நல்ல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதுதான் ஜெய்பீம் படத்திற்கு கிடைத்த பெரிய வெற்றி என்று பெருமிதமாக பேசியுள்ளார் சிவகுமார். முதலில் ஞானவேல் ஒரு படம் எடுத்தார் நீ இதுக்கலாம் சரிப்பட்டு வரமாட்ட என்று பேனாவை பிடிங்கிட்டு போ என்றேன் அதன் பின் ரோசப்பட்டு துணிஞ்சி ஒரு அடி அடிச்சி என்னை குப்புறத்தாளி ஓங்கி குத்திட்டான் என்று சிவகுமார் ஜெய் பீம் இயக்குனரை புகழ்ந்து கூறினார்.

Exit mobile version