Home CINEMA NEWS எனக்கு உதவியதற்கு நன்றி என சிவகார்த்தியேனுக்கு கூறிய திரிஷா..!! எதற்காக தெரியுமா..?

எனக்கு உதவியதற்கு நன்றி என சிவகார்த்தியேனுக்கு கூறிய திரிஷா..!! எதற்காக தெரியுமா..?

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சென்ற ஆண்டு விஜய்சேதுபதியுடன் நடித்த 96 படம் மாபெரும் வெற்றி பெற்றது.இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் வெளியான படம் எங்கேயும் எப்போதும். இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்தப் பட இயக்குனர் தற்போது இயக்கியுள்ள படம் ராங்கி. இந்த படத்தில் திரிஷா தான் கதாநாயகி. இந்த படத்துக்கான கதை மற்றும் வசனத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் எழுதியுள்ளார். ராங்கி என்றால் அடங்காத துணிச்சல் மிகுந்த பெண் என்று பொருள்.

இந்த படத்தில் நிறைய சண்டை காட்சிகள் உள்ளன. இந்த படத்தை லைகா புரொடக்ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்திற்கான வேலைகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றது. இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் பனித்துளி என்னும் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பாடலை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

இதற்கு நன்றி கூறும் வகையில் ஒரு டுவிட் செய்துள்ளார் திரிஷா. எனக்கு உதவிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version