Home CINEMA NEWS மாநாடு நடக்கும் போது தரையில் படுத்து தூங்கிய சிம்பு..!!! இணையத்தில் வெளியான புகைப்படங்கள்..!!!

மாநாடு நடக்கும் போது தரையில் படுத்து தூங்கிய சிம்பு..!!! இணையத்தில் வெளியான புகைப்படங்கள்..!!!

simbu maanadu shooting spot

சிம்பு டிஆர் ராஜேந்தர் அவர்களின் செல்லப்பிள்ளை. தனது மகனை எப்படியாவது ஒரு வெற்றிகரமான கதாநாயகனாக ஆக்க வேண்டுமென்று சிம்புவை சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஈடுபடுத்தி வந்தார் டிஆர்.

சிம்புவும் காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் அறிமுகமான முதல் படத்திலேயே சிம்புவுக்கும் அந்த படத்தின் கதாநாயகி சார்மிக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வர ஆரம்பித்தது. கமர்சியல் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த சிம்புவிற்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தார்கள்.

அந்த நேரத்தில் பிரபலமான நடிகையாக இருந்த நயன்தாராவை காதலித்தார் சிம்பு. இருவரும் ஒன்றாக சுற்றி வந்தனர். வல்லவன் என்ற படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைத்தார் சிம்பு. சிம்பு நயன்தாரா லிப்லாக் புகைப்படங்கள் வளவன் படத்திற்கு பெரிய விளம்பரத்தை தேடி கொடுத்தது.

தீவிரமாக காதலித்து வந்த சிம்பு நயன்தாரா ஜோடி திடீரென்று ஒரு சில பிரச்சனைகளால் பிரிந்தனர். அதன் பின்னர் மனம் நொந்து போன சிம்பு சினிமாவில் கடமைக்கு நடிக்க ஆரம்பித்தார். சில ஆண்டுகள் கழித்து நடிகை ஹன்சிகாவும் சிம்புவும் காதலித்து வந்தனர்.

சிம்புவின் ராசியோ என்னமோ அந்தக் காதலும் நிலையாக இல்லை. ஹன்சிகாவின் தாயார் தான் எதிர்ப்பு தெரிவித்தார் என்கிறார்கள் நெருங்கிய வட்டாரத்தில்.

காதல் தோல்வியால் மனவேதனை அடைந்த சிம்பு கமிட்டான படங்களின் ஷூட்டிங்குக்கு சரியாக கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார். தயாரிப்பாளர்களே சிம்புவை நம்பி படம் எடுக்க பயந்தார்கள். அதன்பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட சிம்பு சில வருடங்கள் ஆன்மீக ஸ்தலத்திற்கு சென்று வந்தார்.

ஒரு இசை வெளியிட்டு விழாவில் என்னிடம் பணம் இல்லை என் செலவுக்கு என் தாயாரிடம் வாங்கும் சூழ்நிலையில் இருக்கிறேன் நான் நம்பியவர் என்னை விட்டு போய்ட்டார் என்று கண்கலங்கி பேசினார்.

தனது குண்டான உடலை கடுமையாக உடற்பயிற்சி செய்து பழையபடி முஸ்லிம் மன் ஹாண்ட்சம் சிம்புவாக மாறினார். சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்து அந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்தார்.

விஜய்யின் மாஸ்டர் படத்துடன் ரிலீஸ் ஆனதால் என்னமோ ஈஸ்வரன் படத்திற்கான வரவேற்பு பெரிய அளவில் இல்லை. தற்பொழுது கௌதம் மேனன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கும் சிம்பு ஏற்கனவே கமிட்டான படங்களின் சூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வரும் சிம்பு தற்போது இரவும் பகலுமாக சூட்டிங் வருகிறாராம். மாநாடு படத்தின் ஷூட்டிங் இரவு நேரத்தில் நடந்து கொண்டிருக்கிறது அந்த படத்தில் எஸ் ஜே சூர்யா அவர்கள் போலீசாக நடிக்கிறார். சிம்பு சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இரவு நேரம் என்பதால் தனக்கு சூட் இல்லாத நேரத்தில் சிம்பு தரையில் படுத்து அப்படியே தூங்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பழையபடி சிம்பு சினிமாவை காதலிக்கத் தொடங்கி விட்டார் என்று கூறி வருகிறார்கள்.

Exit mobile version