Home CINEMA NEWS சிம்பு வெங்கட் பிரபு கூட்டணியில் நாளை நடக்க இருந்த மாநாடு தள்ளி போகிறது..!!! நாளை மாநாடு...

சிம்பு வெங்கட் பிரபு கூட்டணியில் நாளை நடக்க இருந்த மாநாடு தள்ளி போகிறது..!!! நாளை மாநாடு ரிலீஸ் ஆகாது..!!! சிம்புவிற்கு வந்த சோதனை.

manaadu not releasing tomorrow

சிம்பு நீண்ட நாட்களுக்குப் பிறகு தனக்கு கம்பேக் படமாக அமையும் என்று ஈஸ்வரன் படத்தில் நடித்தார் அந்த படம் ஓரளவுக்கு சுமாரான அளவில் தான் சென்றது அதன்பின் தனது முழு உழைப்பையும் கொடுத்து மாநாடு என்ற படத்தில் நடித்து வந்தார்.

மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு அவர்கள் இயக்கி இருந்தார். நாளை வெளியாக வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து டிவிகள் மற்றும் சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் கொடுத்தார்கள்.

ரசிகர்களும் பெரிய வரவேற்பை கொடுத்தார்கள் டிக்கெட் ஓபன் செய்தவுடன் பல திரையரங்குகளில் முதல் நாள் டிக்கெட் காலியாகும் அளவிற்கு பெரிய வரவேற்பு மாநாடு படத்துக்கு கிடைத்தது.

வித்தியாசமான கதையில் சிம்பு நடிக்கிறார் வெங்கட் பிரபு இயக்குகிறார் இன்னொரு மங்காத்தாவாக அமைய வாய்ப்பு இருக்கிறது என்று ரசிகர்கள் அனைவரும் பெரிய எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். படத்தைய் பார்த்த படக்குழுவினர் படம் செமயா வந்து இருக்கு என்று கூறிவந்தனர்.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் மாநாடு படம் நாளை வெளியாக அது தவிர்க்க முடியாத சில காரணங்களால் மாநாடு படம் வெளியீடு தள்ளிப் போகிறது என்பதை தெரிவித்துள்ளார்.

மாநாடு படத்தின் இயக்குனர் சுரேஷ் காமாட்சி அவர்கள் கூறியது நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஒரு படைப்பு இதில் பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன் தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப் படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக் கொள்கிறேன் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று வருத்தத்தோடு கூறியுள்ளார்.

மாநாடு தள்ளி கொண்டே போவதற்கு காரணம் என்ன..!!! ஏன் சிம்புவை டார்கெட் செய்கிறார்களா என்ற குழப்பம் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version