Home CINEMA NEWS தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள் செல்வராகவனின் பதிவு ஒரு...

தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள் செல்வராகவனின் பதிவு ஒரு வேலை தனுஷ் ஐஸ்வர்யாவிற்காக இருக்குமோ..!!!

dhanush aishwarya selvaraghavan

செல்வராகவன் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதனை இயக்கி ரசிகர்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தவர். அழுத்தமான கதையை ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இயக்கி பல வருடங்கள் கழித்தும் அந்தக் கதாபாத்திரங்கள் நினைவில் இருக்கும்படி படத்தை எடுக்கும் ஒரு இயக்குனர்.

இவர் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படம் அவருடைய தம்பி தனுஷ் அவர்களுக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது தனுஷின் நடிப்பை வெளிக்கொண்டு வந்து அவர் எவ்வளவு பெரிய நடிகர் என்பதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியது செல்வராகவனுக்கு பெரிய பங்கு இருக்கிறது. அதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து கொக்கி குமாரு என்ற கதாபாத்திரம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு கதாபாத்திரமாக உள்ளது.

ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தை கார்த்தியை வைத்து பல வருடங்கள் இயக்கி அதனை வெளியிட்டார் கலவையான விமர்சனங்களை சந்தித்து ஆயிரத்தில் ஒருவன் சில நாட்களுக்குப் பிறகு அந்தப் படம் ரசிகர்களின் FAVOURITE படமாக அமைந்தது. கார்த்திக்கு பெரிய வெற்றிப் படமாகவும் ஆயிரத்தில் ஒருவன் படம் அமைந்தது. அதனை தொடர்ந்து ரசிகர்கள் எப்போது ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் வரும் என்று செல்வராகவனிடம் அடிக்கடி இந்த கேள்வியை முன்வைத்து வந்தனர்.

பல வருடங்களாக ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பாகம் இரண்டை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது ஆனால் எப்போது என்று தான் தெரியவில்லை என்று கூறி வந்தார் செல்வா. போன ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாகவும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனுஷ் தான் ஹீரோவாக நடிக்கிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் தனுஷ் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்தவுடன் ரசிகர்கள் அந்த படத்தை பெரிதாக எதிர்பார்த்து வந்தனர்.

அடிக்கடி ட்விட்டர் பக்கத்தில் எதாவது சில விஷயங்களை பகிர்ந்து வந்த செல்வராகவன் வாழ்க்கை பற்றியும் புரிதல் பற்றியும் தொடர்ந்து தொடர்ந்து பதிவிட்டு வந்தார். என்ன செல்வராகவன் இப்படி எல்லாம் பதிவு போடுகிறே ஒரு வேலை சோலி முடிஞ்சிட்டா தனது மனைவியை விவாகரத்து செய்ய போகிறாரோ என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

செல்வராகவன் போட்ட பதிவுகளை பார்க்கையில் டிசம்பர் மாதத்திலேயே தனுஷ் ஐஸ்வர்யா விஷயத்தில் ஏதோ பெரிய பிரச்சினை இருந்தாக பேசப்பட்டு வருகிறது. செல்வராகவனின் சில பதிவுகளை பார்த்த ரசிகர்கள் ஒரு வேலை தனுஷ் ஐஸ்வர்யா பிரிவை தான் மறைமுகமாக இப்படி சொல்லி இருக்காரே என்று கூறி வருகிறார்கள் சிலர்.

இதோ செல்வராகவனின் பதிவுகள்.

Exit mobile version