சசிகலா புரட்சித்தலைவி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நெருங்கிய தோழி. இன்று பல கோடிகளுக்கு அதிபதி. திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி என்ற ஊரில் பிறந்த சசிகலா. நடராஜன் என்பவரை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் செய்து கொண்டார்.
நடராஜன் அவர்கள் மக்கள் தொடர்பு அதிகாரியாக தமிழக அரசுக்கு பணிபுரிந்து வந்தார். எம்ஜிஆர் அவர்களுக்கு அடுத்து ஜெயலலிதாவிற்கு உறுதுணையாக இருந்தது சசிகலா. எந்த ஊர் கோயில் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி சசிகலாவுடன் தான் ஜெயலலிதா செல்வார்.
சசிகலா வீட்டு திருமண விழாவை தனது வீட்டு திருமண விழா போல ஆடம்பரமாக நடத்தி அழகு பார்ப்பார் ஜெயலலிதா. ஒரு நேரத்தில் அம்மா அவர்களின் தத்துப்பிள்ளை என்றால் வி என் சுதாகரன் என்று கூறுவார்கள் அந்த அளவிற்கு சசிகலா ஜெயலலிதா அவர்களுடன் நெருக்கமாக பழகுவார்.
ஜெயலலிதா இறந்த பின் சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா கர்நாடகாவில் உள்ள அக்கிரகார ஜெயிலில் சிறை தண்டனை முடிவடைந்து தற்பொழுது விடுதலை ஆக உள்ளார் என்ற செய்திகள் பரவி வருகிறது.
சர்ச்சையான திரைப்படங்களை இயக்கி சர்ச்சையைக் கிளப்பும் இயக்குனர் ராம்கோபால் வர்மா என்பவர் தற்பொழுது சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளாராம். அந்த படத்தில் ஊர்வசி சசிகலா கதாபாத்திரத்திலும், ராதிகா ஜெயலலிதா கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.
ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பின் விசாரணை முடிவடையாமல் இருக்கும் இந்த நேரத்தில் சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை பற்றி படம் எடுக்கும்போது ஏதாவது சர்ச்சை ஏற்படும் என்று திரை வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.