Home CINEMA NEWS திருமணத்திற்கு பின்னும் அது குறையாத சமந்தா.!!! கிண்டல் செய்து வரும் ரசிகர்கள்…!!!

திருமணத்திற்கு பின்னும் அது குறையாத சமந்தா.!!! கிண்டல் செய்து வரும் ரசிகர்கள்…!!!

samantha in vijays theri

நடிகை சமந்தா பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அந்தப் படத்தில் நடிகர் முரளி அவர்களின் மகன் அதர்வாவுடன் ஜோடியாக நடித்திருந்தார். சமந்தா அதனைத் தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் நடித்து வந்தார் அதே சமயத்தில் தெலுங்கு படங்களிலும் கமிட்டாகி நடித்து வந்தார்.

தமிழைப் போல இவருக்கு தெலுங்குவிலும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக நடித்து வந்த சமந்தா கவர்ச்சி வேடங்களில் நடிப்பதில்லை என்று ஆரம்ப காலத்தில் ஒரு முடிவோடு இருந்தார் ஆனால் கமர்சியல் படம் என்றால் அதில் கொஞ்சம் கவர்ச்சி காட்டியே ஆகவேண்டும் என்ற ஒரு சில இயக்குனர்கள் வைத்த கோரிக்கையால் கவர்ச்சிக்கும் ஓகே சொன்னார் சமந்தா.

தமிழில் அஞ்சான் என்ற படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி காட்டிய சமந்தாவிற்கு அஞ்சான் படம் பெரிய ஹிட் படமாக அமையாவிட்டாலும் அதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் குவிந்தது.

அதன்பின் நாகர்ஜுன் அமலா அவர்களின் மகன் நாக சைதன்யா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. ஆந்திராவில் மாடர்ன் உடைகளை தயாரித்து விற்கும் பணிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் சமந்தா.

தற்பொழுது நயன்தாராவின் வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாராவும் சமந்தாவும் நடிக்கிறார்கள். நயன்தாராவின் காதலர் என்பதினால் நயன்தாராவிற்கு ஸ்கோர் பண்ணும் காட்சிகள் வைத்து விடுவார் என்று முதலில் யோசித்த சமந்தா அதன்பின் விக்னேஷ் சிவன் கொடுத்த விளக்கத்தால் சமந்தா நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

விஜய் சேதுபதி மற்றும் விஜய் சேதுபதி குடும்பத்தினர் சமந்தாவின் பெரிய ரசிகர்கள். குறிப்பாக விஜய் சேதுபதியின் மகன் சமந்தாவின் தீவிர ரசிகராம். சூட்டிங் ஸ்பாட்டிற்கு தனது குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து வந்து சமந்தாவிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டார்களாம்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துக்கொண்டு சகுந்தலா என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார் சமந்தா. தங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வரும் சமந்தா திருமணம் ஆனதிலிருந்து சற்று மார்க்கமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சற்று கவர்ச்சியாக இருந்ததால் நெட்டிசன்கள் திருமணத்திற்குப் பின் கொஞ்சம் அடக்கி வசிப்பிங்கனு பார்த்தா டாப் கியர் போட்டு மேலே போறீங்களே சமந்தா என்று கூறி வருகிறார்கள்.

Exit mobile version