Home CINEMA NEWS சமந்தாவிற்கு மருத்துவமனையில் நடந்த பரிசோதனை..!!! சமந்தாவிற்கு என்ன ஆச்சு மேனேஜர் கொடுத்த விளக்கம்.

சமந்தாவிற்கு மருத்துவமனையில் நடந்த பரிசோதனை..!!! சமந்தாவிற்கு என்ன ஆச்சு மேனேஜர் கொடுத்த விளக்கம்.

samantha admitted in AIG hospital rumour spread

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் சமந்தா தமிழ் மட்டுமல்ல தெலுங்கு மொழியிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே கையில் வைத்துள்ளார்.

தற்பொழுது தமிழில் நயன்தாராவின் வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். நயன்தாராவின் பிறந்த நாளிலும் கூட காத்துவாக்குல 2 காதல் படத்தின் சூட்டிங் சமந்தாவுடன் பரபரப்பாக நடந்தது.

சமீபத்தில் ஊடகங்களில் தெலுங்கானாவில் உள்ள காச்சிபவுலியில் உள்ள AIG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. சமந்தாவிற்கு என்ன ஆச்சு ஏன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்கள் என்று ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதறி வந்தனர்.

ஏற்கனவே சமந்தா நாக சைதன்யா பிரிவினை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும் ரசிகர்கள் தற்போது சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக வரும் தகவல்களை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தற்பொழுது இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமந்தாவின் மேனேஜர் மகேந்திரா அவர்கள் கூறியது சமந்தாவிற்கு இருமல் இருந்ததால் ஏஐஜி மருத்துவமனைக்கு சென்று தன்னை பரிசோதித்து கொண்டார்.

தற்பொழுது சமந்தா அவருடைய வீட்டில் ஓய்வில் இருக்கிறார். நலமாக இருக்கிறார் அவர் மருத்துவமனையில் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாக இருக்கும் புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பட பாடலுக்கு ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version