Home CINEMA NEWS கனத்த இதயத்துடன் இதை சொல்கிறேன் சமந்தாவின் பிரிவை அறிவித்த சமந்தாவின் மாமனார் நாகார்ஜுன்.

கனத்த இதயத்துடன் இதை சொல்கிறேன் சமந்தாவின் பிரிவை அறிவித்த சமந்தாவின் மாமனார் நாகார்ஜுன்.

samantha father in law nagaarjun tweet

சமந்தா நாக சைதன்யா பிரிவை அறிவித்த சமந்தாவின் மாமனார்.

சமந்தா தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை. தமிழில் இவருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவிற்கு தெலுங்கிலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

சமந்தா எங்கு சென்றாலும் ரசிகர்களுடன் மறுக்காமல் செல்பி எடுத்துக் கொள்வார் அதுபோல பொது இடங்களில் ரசிகர்களை பார்த்தாலும் சரி ஏர்போர்ட்டுக்கு சென்றாலும் சரி சில நிமிடங்கள் நின்று ரசிகர்களிடம் கையசைத்து விட்டு பேசி விட்டு தான் செல்வார்.

ரசிகர்களும் சமந்தா மீது அன்பை காட்டி வந்தனர். சமந்தா நாக சைத்தன்யா இருவருக்கும் 2017 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். சமந்தாவின் திருமணம் பிரம்மாண்டமான முறையில் இந்து முறைப்படியும் கிறிஸ்தவ முறைப்படியும் நடந்தது. சமந்தாவின் திருமண சேலை தங்கத்தால் எம்பிராய்டிங் செய்யப்பட்டு அனைவரும் வியக்கும்படி இருந்தது அந்த புடவையின் விலையை 10 -15 லட்சம் வருமாம். அந்த அளவிற்கு பார்த்துப் பார்த்து திருமணம் நடந்தது. நன்றாக சென்று கொண்டு இருந்த இவர்களின் வாழ்க்கையில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.

திருமணமாகி மூன்று வருடங்கள் கழித்து இருவரும் பிரிவதாக எடுத்துள்ள முடிவு பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தெலுங்கில் பிரபல நடிகர் நாக அர்ஜுன் அவர்களின் மகன் தான் நாக சைதன்யா.

நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா. தற்பொழுது சில மன கசப்பால் இருவரும் பிரிந்து உள்ளார்கள். நாகர்ஜுன் அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த சமந்தாவிற்கு பதில் ஏதும் அளிக்காமல் இருந்தார் அவருடைய மாமனார் நாகரஜுன் அப்போதே ரசிகர்கள் நாகஅர்ஜுன் அவர்களிடம் சமந்தாவிற்கு ஏன் பதில் அளிக்கவில்லை ஏதும் பிரச்சனையா என்று கேட்டு வந்தார்கள் அதற்கு அமைதி காத்த நாகஅர்ஜுன் தற்பொழுது தனது மகன் மற்றும் மருமகள் பிரிகிறார்கள் என்று உருக்கமான பதிவு ஒன்றை போட்டு உள்ளார்.

அந்த பதிவில் “கனத்த இதயத்துடன் இதைச் சொல்கிறேன்! சமந்தாவிற்கும் நாகசைதன்யா இடையில் நடந்தது எதிர்பாராத ஒன்று . கணவன் மனைவிக்கு இடையே நடப்பது மிகவும் தனிப்பட்ட விஷயம். சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் எனக்கு மிகவும் பிரியமானவர்கள், என் குடும்பத்தினர் எப்போதும் சமந்தாவுடன் செலவழித்த தருணங்களை போற்றுவார்கள், அவள் எப்போதும் எங்களுக்கு அன்பாக இருப்பாள். கடவுள் அவர்கள் இருவரையும் பலத்துடன் ஆசீர்வதிப்பாராக” என்று உருக்கமான பதிவை ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

Exit mobile version