Home CINEMA NEWS விவகாரத்திற்கு பிறகு முதல் முறையாக சமந்தா கலந்து கொண்ட கடை திறப்பு விழா…!!! ரசிகர்களின் பார்வையை...

விவகாரத்திற்கு பிறகு முதல் முறையாக சமந்தா கலந்து கொண்ட கடை திறப்பு விழா…!!! ரசிகர்களின் பார்வையை இழுத்த சமந்தாவின் உடை.

samantha store launch in naglonda

சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை சமீபத்தில் தான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாக அர்ஜுன் அவர்களின் மகன் நாக சைதன்யாவை விவாகரத்து செய்துவிட்டு தனது திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

சமந்தாவின் இந்த திடீர் முடிவு செய்து ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்களும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மக்களின் மனதை பெரிதாக கவர்ந்த சமந்தா நன்றாக வாழ வேண்டிய வயதில் விவாகரத்து செய்துவிட்டார் என்று பலரும் வருத்தப்பட்டு வந்தனர்.

விவாகரத்துக்கு பின் இமயமலைக்கு ஆன்மீகச் சுற்றுலா சென்று வந்த சமந்தா தற்பொழுது விஜய் சேதுபதி நயன்தாரா நடிக்கும் காத்துவாக்குல இரண்டு காதல் படப்பிடிப்பில் கலந்துகொண்டு பட வேலைகளை முடித்து உள்ளார். கதீஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் சமந்தா. சமீபத்தில் கூட சமந்தா நடித்த தெலுங்கு படமான சகுந்தலம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரல் ஆனது.

முன்பெல்லாம் தனது கணவருடன் கடை திறப்பு விழா மற்றும் நிகழ்ச்சிகளில் எல்லாம் சென்று வந்த சமந்தா முதல் முதலாக விவாகரத்துக்கு பிறகு கணவர் இல்லாமல் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

தெலுங்கானாவில் உள்ள நல்கொண்டா என்ற ஊருக்கு கடை திறப்பு விழாவிற்கு சமந்தா வருகிறார் என்ற செய்தி அறிந்த உடனே ரசிகர்கள் அந்த பகுதியையே சூழ்ந்து கொண்டனர். சிவப்பு நிற பாரம்பரிய ஜரி புடவையை கட்டி கொண்டு பார்க்க லட்சணமாக அழகாக வந்து இறங்கினார். ரசிகர்கள் சமந்தா ஜரி புடவையில் செம அழகா இருக்காங்கனு ரசித்து பார்த்து கொண்டு இருக்க அங்கு கூடியிருந்த தனது ரசிகர்களை பார்த்து கையசைத்து நன்றியும் தெரிவித்தார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் மகனுடன் விவாகரத்து பெற்ற பிறகும் சமந்தாவிற்கு தெலுங்கு ரசிகர்கள் இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்தது தெலுங்கு தேசத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version