Home CINEMA NEWS சிறுமி இடிபாடுள்ள மாத்திக்கிட்டு கத்துற சத்தம் கேட்டு பகீர்ன்னு இருந்திச்சி. தீயணைப்பு வீரர்களுக்கு எவ்வளவு...

சிறுமி இடிபாடுள்ள மாத்திக்கிட்டு கத்துற சத்தம் கேட்டு பகீர்ன்னு இருந்திச்சி. தீயணைப்பு வீரர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது‌ – நடிகர் சூரி.

soori thanks to fire service

சேலத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியில் கோபி நாத் என்பவரின் தாயார் ராஜலட்சுமி சமைப்பதற்காக எரிவாயு சிலிண்டரை பற்ற வைத்த பொழுது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டர் வெடித்தது.

கேஸ் லீக் ஆவது தெரியாமல் அடுப்பை பற்ற வைத்ததால் அந்த விபத்து நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது அருகே இருந்த வீடுகளும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர் மொத்தம் 11 பேர் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் பரிதாபமாக ராஜலக்ஷ்மி என்கிற பாட்டி உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை சேலத்தில் ஏற்படுத்தியது தமிழக அரசு கேஸ் சிலிண்டர் வெடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சூரி அவர்கள் இந்த சம்பவம் கேள்விப்பட்டு தனது வருத்தத்தை பதிவு செய்து உள்ளார். அவர் பதிவில் அவர் கூறியது “சேலத்தில் இன்னைக்கு காலைல கேஸ் சிலிண்டர் வெடிச்சு வீடு இடிஞ்ச சம்பவம் பெரும் துயரம், அதிலும் சிறுமி இடிபாடுல மாட்டிக்கிட்டு கத்தும் செய்தி கேட்டு பகீர்ன்னு இருந்துச்சு. அந்த சிறுமியையும் மத்தவுங்களையும் பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர் க்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது‌” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

Exit mobile version