Home CINEMA NEWS திடீர் என்று ரகசிய திருமணம் செய்து கொண்டாரா சாய் பல்லவி ?இணையத்தில் உலா வரும்புகைப்படம்.

திடீர் என்று ரகசிய திருமணம் செய்து கொண்டாரா சாய் பல்லவி ?இணையத்தில் உலா வரும்புகைப்படம்.

sai pallavi marriage gossip

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் தற்பொழுது அதிக படங்களில் கமிட்டாகி உள்ளார் ரவுடி பேபி சாய் பல்லவி. நடனத்தை விரும்பி ஆடும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் ஆடும் நடனங்கள் ரசிகர்களால் ரசிக்கும்படி இருக்கும்.

2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் நடனமாடி அசத்தினார். சாய் பல்லவி இயக்குனர் ஜீவா அவர்களின் தாம்தூம் என்ற ஜெயம் ரவி நடித்த படத்தில் ஹீரோயின் கங்கனா ரனாத்க்கு சொந்தக்கார பெண்ணாக நடித்திருந்தார்.

2015ஆம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட் திரைப்படமான பிரேமம் என்ற படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றார் சாய் பல்லவி. பிரேமம் படம் மலையாள படமாக இருந்தாலும் சாய்பல்லவியின் நடிப்புக்காக தமிழ் சினிமா ரசிகர்களும் படத்தைப் பார்த்தனர். அந்தப் படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனதால் அந்த படத்தை தமிழிலும் ரிலீஸ் செய்தார்கள்.

முதல் முதலாக ஹீரோயினாக அறிமுகமான பிரேமம் படம் மாபெரும் வெற்றி பெற்றதால் சாய்பல்லவி தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. தமிழ் சினிமாவில் சூர்யா தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் சாய் பல்லவி. குறிப்பாக மாரி 2 படத்தில் இசை பல்லவி நடித்திருந்தார் அந்த படத்தில் இடம் பெற்றிருந்த ரவுடி பேபி என்ற பாடல் யூடியூபே ஆடி போகும் அளவிற்கு பெரிய ஹிட்டானது.

தற்பொழுது இணையத்தில் சாய்பல்லவி திருமணம் செய்து கொண்டது போல ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது அந்த புகைப்படத்தில் சாய்பல்லவி மாலையுடன் மணக்கோலத்தில் இருந்ததால் ரசிகர்கள் சாய்பல்லவிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

திடீரென்று ரகசிய திருமணம் செய்து கொள்ள காரணம் என்ன என்று கேட்டு அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அந்தப் புகைப்படம் சாய்பல்லவி நடித்து நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகியுள்ள பாவ கதைகள் என்ற வெப்சீரிஸ்சில் நடித்த புகைப்படமாம்.

இதை பார்த்த நெட்டிசன்கள் நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்கு இது ஒரு பிரச்சனையா என்று பதிவிட்டு வருகின்றனர்.

Exit mobile version