பொதுவாக சாலையில் வாகன ஓட்டிகள் சீராக செல்ல சிக்னல் பயன்படுத்தப்படுகிறது. அதோடு சிக்னல் அருகே போக்குவரத்து காவல் அதிகாரி நின்று போக்குவரத்தை சரி செய்வது வருவார்.
இந்நிலையில் கோவையில் சோதனை முறையில் போக்குவரத்து காவல் துறையினர் ரிமோட் மூலம் சிக்னலை கட்டுப்படுத்தும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவிநாசி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மருதமலை சாலை மற்றும் திருச்சி சாலை என 52 இடங்களில் சிக்னல்கள் உள்ளன.
இந்த திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் சிக்னல்களை தன்னிச்சையாக இயக்கம் திட்டம் அமலுக்கு வந்தது. அதில் உள்ள சிக்கல்களை தவிர்க்கும் வகையில் சாலையில் அங்கும் இங்கும் நடந்தபடி சிக்னல்களை இயக்கம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.