தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரீமா சென். நடிகை ரீமாசென் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
மின்னலே திரைப்படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவரது முதல் படமே மாபெரும் ஹிட்டடித்தது. இதன் மூலம் தமிழக ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர். முதல்படமே ஹிட்டாக அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.
அந்தவகையில் தளபதி விஜயுடன் பகவதி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். நடிகை ரீமாசென் ஜேஜே, செல்லமே, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார்.
அதன்பிறகு திருமண வாழ்க்கையில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் பிரபல தொழிலதிபர் கரன் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை ரீமா சென்னுக்கு ருத்ர வீரர் என்ற மகன் உள்ளார்.
சமீபத்தில் ரீமா சென் தனது 40வது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார். மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதனை ரசிகர்கள் ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியத்துடன் புகைப்படங்களை லைக் செய்து வருகின்றனர்.