Home CINEMA NEWS டால்பினை இறுக்கி கட்டிப்பிடித்து விளையாடிய தொடையழகி ரம்பா…!!! குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற ரம்பா.

டால்பினை இறுக்கி கட்டிப்பிடித்து விளையாடிய தொடையழகி ரம்பா…!!! குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற ரம்பா.

Rambha

தமிழ் சினிமாவில் 2000களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. அவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

ஒரு நேரத்தில் ரம்பாவின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் தவம் கிடந்தார்கள். அந்த அளவிற்கு படு பிசியாக நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் உழவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற ரம்பாவை தொடையழகி ரம்பா என தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

நடிகை ரம்பா திருமணத்திற்கு முன்பு கடைசியாக 2010ஆம் ஆண்டில் தமிழில் பெண் சிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு கனடாவை சேர்ந்த ஸ்ரீலங்கன் தமிழ் தொழிலதிபர் இந்திர குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். நடிகை ரம்பா சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது குடும்பத்தினருடன் உள்ள புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் கடற்கரையில் டால்பின் கட்டிப்பிடித்தபடி புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். அதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றனர்.

Exit mobile version