தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். இவருக்கென்று ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே தமிழ்சினிமாவில் உள்ளது. கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் பொழுதே இவருக்கு பல கட்சி வாய்ப்புகள் வந்தன.
அத்தனையும் நிராகரித்து படத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வந்த ரஜினிகாந்த், ரசிகர்களின் அன்பு தொல்லையால் தற்போது அரசியல் பிரவேசம் எடுக்கும் முடிவு எடுத்துள்ளார். இதன் காரணமாக சில நாட்களுக்கு முன்பு தனது நிர்வாகிகளுடன் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் ரஜினி தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பலரும் ரஜினியின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று ட்விட் செய்துள்ளார். இவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். இவர் பெயர் சத்தியமூர்த்தி.
சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார், மேலும் பட்டுக்கோட்டையில் உள்ள ரஜினி மக்கள் மன்றத்தில் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். இந்த ட்விட் பற்றி அதிர்ந்த மக்கள் மன்ற நிர்வாகிகள் சத்தியமூர்த்தியை தொடர்பு கொண்டு ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து ஒரு நல்ல முடிவை எடுப்பார். நீங்கள் இது மாதிரி தவறான முடிவை எடுக்கக் கூடாது என்றும் உடனடியாக பதிவைநீக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அதன்பிறகு சத்தியமூர்த்தி இந்த பதிவை டுவிட்டரில் இருந்து நீக்கி உள்ளார்