Home CINEMA NEWS கணவர் மறைவிற்கு பின் முதல் முதலாக உருக்கமான பதிவை பதிவிட்ட புனித் அவர்களின் மனைவி அஸ்வினி..!!!

கணவர் மறைவிற்கு பின் முதல் முதலாக உருக்கமான பதிவை பதிவிட்ட புனித் அவர்களின் மனைவி அஸ்வினி..!!!

puneeth rajkumar wife thanks to fan for great support

கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் அப்பு என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி எதிர்பாராதவிதமாக மாரடைப்பு வந்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

நாற்பத்தி ஆறு வயதான இவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்ட உடனே கன்னட திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணம் புனித் ராஜ்குமார் அவர்களுக்கு கன்னடம் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ் போன்ற திரை உலக பிரபலங்களும் நெருங்கிய நண்பர்கள்.

கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது உடல் மீது அக்கறை கொண்ட ஒருவருக்கு இப்படி ஒரு சம்பவம் எப்படி நடந்தது என்று இன்றும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. புனித் இறந்து ஒரு மாதங்கள் நெருங்கியுள்ள நிலையில் இன்றும் கர்நாடக மாநிலத்தில் புனித்தின் ரசிகர்கள் அவரின் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி மாலை போட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சினிமாவில் நடித்து விட்டோம் சம்பாதித்து விட்டோம் என்று இல்லாமல் சத்தமில்லாமல் அவர் செய்த உதவி அவர் மறைவுக்குப் பின்பு தான் வெளியே வந்தது. 1800 மாணவ மாணவிகளை படிக்க வைத்தது மட்டுமல்லாமல் முதியோர் இல்லங்கள், பசுக்களைப் பாதுகாக்கும் கோசலை என்று சத்தமில்லாமல் பல உதவிகளை செய்துவந்துள்ளார் அதுமட்டுமல்லாமல் தனது ரசிகர்களின் குடும்பத்திற்கு மறைமுகமாக பல உதவிகளைச் செய்து வந்திருக்கிறார் மனிதர். இறந்த பின் செய்த கண் தானத்தால் 4 இளைஞர்கள் பார்வை பெற்றனர். சமீபத்தில் புனித் அவர்களின் மறைவிற்கு பிறகு கன்னட ரசிகர்கள் ஒன்று திரண்டு கண்தானம் செய்து உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

புனித் அவர்களது மனைவி அஸ்வினி புனித் ராஜ்குமார் அவர்கள் முதல் முறையாக கணவர் மறைவிற்கு பின் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியூட்டும் அன்பும் பாசமும் கொண்டு எனது கணவரை பவர் ஸ்டார் ஆக மாற்றிய திரு புனித் ராஜ்குமாரின் அகால மரணத்தை நினைத்துப் பார்க்க முடியாது ஆயினும் கூட அத்தகைய நேரத்தில் நீங்கள் அவருக்கு மிகவும் மரியாதையுடன் பிரியாவிடை அளித்துள்ளீர்கள்.

திரையுலக பிரியர்கள் மட்டுமின்றி வயது வரம்பு மீறி நாடு முழுவதும் இருந்து வரும் லட்சக்கணக்கான இரங்கலை பார்த்து மனம் கனக்கிறது. அவர்களின் நினைவுகள் இன்னும் உயிருடன் உள்ளது.

உலகெங்கிலும் உள்ள எங்களுக்கு ஆதரவாக நின்று ஆதரவளித்த சக ரசிக கடவுள்கள் மற்றும் பொதுமக்களுக்கு முழு குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

Exit mobile version