Home NEWS ஜாலிக்காக செய்தேன் விபரீதம் ஆகிவிட்டது கைதான ராஜகோபாலன் விசாரணையில் புலம்பல்.

ஜாலிக்காக செய்தேன் விபரீதம் ஆகிவிட்டது கைதான ராஜகோபாலன் விசாரணையில் புலம்பல்.

psbb rajagopalan police enquiry

சென்னை கேகே நகரில் இயங்கி வரும் பத்மா சேஷாத்திரி பள்ளியில் பணிபுரியும் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளிடம் ஆன்லைன் வகுப்பில் தவறாக நடந்து கொண்டதால் நேற்று அவரை கைது செய்தனர் காவல்துறையினர்.

கைது செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மேலும் பாலியல் தொந்தரவுகள் பற்றி புகார்களை கொடுக்க தயாராக இருந்தால எங்களிடம் கொடுங்கள் நாங்கள் உங்கள் விவரங்களை பாதுகாப்பாக வைத்திருப்போம் என்று கூறியதற்கு பிறகு ஏகப்பட்ட முன்னாள் பள்ளி மாணவிகள் மற்றும் மாணவர்கள் ராஜகோபாலன் மற்றும் அந்த பள்ளியில் உள்ள சில ஆசிரியர்கள் பற்றியும் தகவல்கள் கொடுக்க முன்வந்துள்ளனர்.

ராஜகோபாலன் மீது ஏற்கனவே அடுக்கடுக்காக புகார் இருந்தபோதும் பள்ளி நிர்வாகம் அவரை கண்டித்து மட்டும் விட்டது ஏன் ?. ஏன் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பெரிய புதிராகவே இருக்கிறது.

இந்நிலையில் விசாரணையில் ராஜகோபாலன் நான் ஜாலிக்காக செய்தேன் அது இந்த அளவிற்கு விபரீதமாகும் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இன்னும் சில விசாரணைக்குப் பிறகு தான் யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்ட உள்ளார்கள் என்ற விவரம் தெரியவரும்.

இது குறித்து கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனி குழு ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதுபோல ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர் மாணவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று சில நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version