Home NEWS தூய்மை பணியாளரின் ஆயுதபூஜை கொண்டாட்டம் வைரலாகும் புகைப்படம்

தூய்மை பணியாளரின் ஆயுதபூஜை கொண்டாட்டம் வைரலாகும் புகைப்படம்

தற்போது தமிழ்நாட்டில் விழாக்காலம். நவராத்திரி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை , தீபாவளி என வரும் இரண்டு மாதங்களுக்கு விழாக்காலம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பல கடைகளில் பல நிறுவனங்களில் தான் செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து சுத்தம் செய்து வழிபட்டு வருவர்.

உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை என்பது ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக உள்ளது. அது போல தூய்மைப் பணியாளர் ஒருவர் ஆயுதபூஜை கொண்டாடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது . இந்த படத்தில் இவர் மிகவும் அமைதியாக அமர்ந்து கொண்டு குப்பைத் தொட்டிக்கும் துடைப்பத்திற்கும் பொட்டிட்டு வழங்குகிறார்.

நாம் வாழும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் அதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள் தான். இங்கு ஒருவருடைய உழைப்பு எப்பொழுதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர் செய்யும் தொழிலே அவருக்கு தெய்வமாக இருப்பதன் பொருட்டு அவர் இவ்வாறு இந்த செயலை செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

Exit mobile version