Home NEWS பொள்ளாச்சி பாலியல் வழக்களில் சிக்கிய அதிமுக மாணவரணி செயலாளர்..!!! 3 பேரை அதிரடியாக கைது செய்த...

பொள்ளாச்சி பாலியல் வழக்களில் சிக்கிய அதிமுக மாணவரணி செயலாளர்..!!! 3 பேரை அதிரடியாக கைது செய்த சிபிஐ..!!! என்ன நடந்தது.

pollachi case

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் இன்றும் மறக்க முடியாத ஒரு கேவலமான ஒரு விஷயம். 2019ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்திற்கு இன்றுவரை சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. சிபிஐ விசாரணையில் இறங்கிய பிறகு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக வெளியிட்டு மிரட்டி வந்திருக்கிறார்கள் ஒரு கும்பல். அந்த நேரத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்று பரபரப்பாக பரவியது. அதில் ஒரு இளம்பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை ஒரு கும்பல் செய்வது போலவும் அந்தப் பெண்ணை பெல்ட்டால் அடித்து துன்புறுத்துவது போலவும் அந்த வீடியோவில் காட்சிகள் இருந்தது.

இதனை பார்த்த தமிழகமே கொதித்தெழுந்தது. ஒரு பெண் மட்டுமல்ல இவர்கள் பல பெண்களை ஆசை வார்த்தை கூறி தங்களது ஆசைக்கு இணங்க வைத்து அதனை வீடியோவாக எடுத்து கொண்டு மிரட்டி வருவார்களாம். ஒரு கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் இந்த வழக்கில் வசந்தகுமார், சபரிராஜன், சதீஷ் திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அரசியல் பிரமுகர்களின் வாரிசு அதனால் அவர்கள் செல்வாக்கை பயன்படுத்தி தப்பிக்க முயன்றார்கள் ஆனாலும் காவல்துறையினர் இந்த விஷயத்தில் கெடுபிடியாக இருந்ததால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிபிஐ தற்பொழுது அருளானந்தம், ஹேரேன்பால், பாபு ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். இதில் அருளானந்தம் அதிமுக மாணவரணி செயலாளர் பதவியில் இருப்பவனாம். கைது செய்யப்பட்ட மூணு பேரையும் ரகசிய இடத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திடீர் மேலும் மூவர் கைது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி சம்பவம் போல என்றும் நாட்டில் பல இடங்களில் சத்தமில்லாமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற மிருகங்களுக்கு சரியான தண்டனை கிடைக்காததால்தான் இன்றுவரை சுற்றி திரிகிறது பல மிருகங்கள் என்று தங்களது கருத்திற் தெரிவித்து வருகின்றனர் இணையவாசிகள்.

Exit mobile version