Home NEWS உன்னை நம்பி வந்த 3 பெண்களை காப்பாற்ற முடியாதவன் எப்படிடா நாட்டு மக்களை காப்பாற்ற முடியும்..!!!...

உன்னை நம்பி வந்த 3 பெண்களை காப்பாற்ற முடியாதவன் எப்படிடா நாட்டு மக்களை காப்பாற்ற முடியும்..!!! தயவு செய்து கமலை நம்பாதீங்க – ராதாரவி ஆவேசம்.

radharavi against kamalahassan

மக்கள் நீதி மய்யம் தேர்தல் பிரச்சாரத்தில் படு பிஸியாக இருக்கிறார் கமலஹாசன். தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் அந்தந்த கட்சித் தலைவர்கள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வரும் இந்நிலையில் கோயமுத்தூரில் வானதி சீனிவாசன் அவர்கள் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். வானதி சீனிவாசன் அவர்களுக்கு ஆதரவாக நடிகர் ராதாரவி பிரச்சாரத்தில் கலந்து கொண்டார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக என்னை அழைத்தார்கள் ஆனால் என்னால் வர முடியவில்லை நான் ஏன் இங்கு வந்திருக்கிறேன் என்றால் இந்த தொகுதியில் கமலஹாசன் போட்டியிடுகிறார் என்று கேள்விப்பட்டேன் .

கமலஹாசனை நம்பாதீங்க மூன்று பெண்களின் வாழ்க்கையை எடுத்த அவர் எப்படி நாட்டை காப்பார் . கமல்ஹாசனைப் பற்றி சென்னையில் உள்ள அவர்களுக்கு நன்றாக தெரியும் எனக்கு மிக நன்றாக தெரியும் நான் அவனை சிறுவயதிலிருந்து பார்த்து வருகிறேன் ஆழ்வார் பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை கூட நடந்து வந்தது இல்லை தற்பொழுது கமலஹாசன் நடந்து வந்து பிரச்சாரம் செய்கிறாராம்.

கமல்ஹாசனுக்கு காலில் பிரச்சனை இருப்பதால் டாக்டர் நடக்க சொல்லியதால் அவர் நடக்கிறதே தவிர இதுவரை அவர் எந்த ஒரு இடத்திற்கும் நடந்து வந்தே கிடையாது.

உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் தயவு செய்து அவனை நம்பாதீர்கள். பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் ஆணுக்கும் பெண்ணுக்கும் லிங்க் கொடுக்கிறான். அவன் நல்லவன் அல்ல அவன் கேட்ட குணம் கொண்டவன் அவனை நம்பாதீர்கள் என்று ராதாரவி பேசியுள்ளார். ராதாரவி கமலஹாசனை பற்றி இப்படிப் தரக்குறைவாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version