பார்வதி நாயர் அபுதாபியில் பிறந்து வளர்ந்த மலையாளி. தல அஜித்தின் என்னை அறிந்தால் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக எலிசபெத் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், நிமிர் போன்ற படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வரும் பார்வதி நாயர் அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார்.
அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தாலும் பல புகைப்படங்கள் முகம் சுளிக்கும் படி இருந்து வந்தது.
அடிக்கடி ஏதாவது மார்க்கமான புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாவில் ரசிகர்களை உசுப்பேற்றி வந்த பார்வதி. சில நாட்களுக்கு முன் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டே வந்தார் அப்போது ஒரு ரசிகர் உங்க சைஸ் சொல்லுங்க என்று கூறியிருந்தார் அதற்கு பதிலடி கொடுத்த பார்வதி என்னுடைய Shoe size 37 என்று தெரிவித்திருந்தார் அதனைத்தொடர்ந்து சில மோசமான கேள்விகள் கேட்க அதற்கு பதிலும் அளித்துள்ளார் பார்வதி.
ஏன் ரசிகர்கள் இது போன்ற கேள்விகளை கேட்கிறார்கள் என்று பார்வதி கேட்க அதற்கு சில ரசிகர்கள் நீங்கள் முதலில் மோசமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை நிறுத்துங்கள் அவர்களும் நிறுத்திவிடுவார்கள் என்று அட்வைஸ் செய்து வருகிறார்கள் நெட்டிசனகள்.