Home NEWS உடன்பிறந்த அண்ணனுக்கு மெழுகு சிலை..!! மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

உடன்பிறந்த அண்ணனுக்கு மெழுகு சிலை..!! மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

உடல்நிலை குறைவால் உயிரிழந்த மகனுக்கு முதலாம் ஆண்டு நினைவு நாளில் 6 அடிக்கு மெழுகு சிலை அமைத்து உள்ளார் ஒரு தந்தை. மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் சரஸ்வதி தம்பதியருக்கு இரண்டு மகள்களுக்கு பிறகு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் மாரி கணேஷ் .

மாரிக்கு பத்து வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி மகன் மற்றும் மகள் இரண்டு குழந்தைகள் உள்ளனர் . சிறுவயது முதலே பெற்றோர் மற்றும் சகோதரர் மீது கணேஷ் அதிக அன்பு வளர்த்து வந்துள்ளார் .

அதுமட்டுமில்லாமல் பெற்றோர்கள் மீதும் மிகவும் அன்பாக இருந்துள்ளார் கணேஷ். இளமையில் புல்லட் பைக் ரேஸர் ஆக இருந்த மாறி கணேஷ் பல போட்டிகளில் முதலிடம் பிடித்து பதக்கங்கள் மற்றும் பல விருதுகளை பெற்றுள்ளார் இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2019ஆம் ஆண்டு உயிரிழந்தார் எந்தராசி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தந்தை முருகேசன் சுமார் 6 லட்சம் செலவில் தத்துரூபமாக மெழுகு சிலை ஒன்றை செய்துள்ளார் மாரி கணேஷ் நண்பர்களும் அவரது குடும்பத்தினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த சிலை செய்ய 6 லட்சம் செலவில் 6 அடிக்கும் மெழுகு சிலை வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். நான் இந்த சம்பவம் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version