Home NEWS தஞ்சை அரசு மருத்துவமணையில் குழந்தையின் கட்டை விரலை துண்டாக்கிய நர்ஸ்!!! விபரம் உள்ளே.

தஞ்சை அரசு மருத்துவமணையில் குழந்தையின் கட்டை விரலை துண்டாக்கிய நர்ஸ்!!! விபரம் உள்ளே.

Thanjavur Medical college

தஞ்சை அரசு மருத்துவமனையில் ட்ரிப் லைனை கத்தரிக்கோலால் நறுக்கி அப்போது பச்சிளம் பெண் குழந்தையின் கட்டை விரல் துண்டானது. தஞ்சை அருகே காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் விவசாயக் கூலித் தொழிலாளி. அவரது மனைவி பிரியதர்ஷினி திருமணமாகி ஒரு வருடமாகிறது. இந்நிலையில் 9 மாத கர்ப்பமாக இருந்த திவ்யதர்ஷினிக்கு கடந்த 25ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. குறைமாத பிரசவம் என்பதால் குழந்தையின் வயிற்றில் கோளாறு இருப்பதாக கூறி தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குழந்தையின் இடது கையில் ட்ரிப் லைன் மூலம் ஊசி மருந்து செலுத்தப்பட்டது. இந்நிலையில் குழந்தை ஆரோக்கியமாக இருந்ததால் நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக குழந்தையின் கையில் உள்ள லைன் நர்ஸ் ஒருவர் கத்தரிக்கோலால் நறுக்கும் போது குழந்தையின் கட்டை விரல் துண்டானது. குழந்தையின் கையில் இருந்து ரத்தம் கொட்டியதை கண்டதாய் பிரியதர்ஷினி கதறி அழுதார். இதைத் தொடர்ந்து குழந்தையின் கையில் மீண்டும் தையல் போடப்பட்டது. இதுகுறித்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி முதல்வர் ரவிக்குமார் கூறுகையில் நர்சிடம் உரிய விசாரணை நடத்தப்படும் அலட்சியத்தால் குழந்தையின் விரல் துண்டானது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

Exit mobile version