Home NEWS பிரபல பத்திரிகையாளர் மரணம்….! நேரில் சென்று அஞ்சலி செலுத்திய மக்கள் செல்வன்…!

பிரபல பத்திரிகையாளர் மரணம்….! நேரில் சென்று அஞ்சலி செலுத்திய மக்கள் செல்வன்…!

தற்போது சினிமா துறையில் உள்ள உள்ள பிரபலங்கள் சிலர் திடீரென மரணிப்பது திரைஉலகையே அச்சுறுத்திவருகிறது. இந்த செய்தி மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சினிமா பத்திரிகைகளுக்கு எப்போதும் மௌசு அதிகம். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆகித்தான் வருகிறது. இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர்களில் ஒருவர் நெல்லை பாரதி.

இவர் எழுத்தாளராகவும் பாடலாசிரியாகவும் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் இவர் இன்று காலை அவரது வீட்டிலேயே உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் அவரது இறுதி சடங்கிற்கு பலரும் கலந்துகொள்ளவில்லை. இதனிடையே நடிகை நடிகர் விஜய் சேதுபதி அவரின் இல்லத்திற்கே சென்று அஞ்சலி செய்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியுள்ளார்.

Exit mobile version