இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த 17ஆம் தேதி நடந்து முடிந்தது சுமார் 18.72 லட்சம் பேரில் நீட் தேர்வினை எழுத விண்ணப்பித்து இருந்தனர். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஒரு பக்கம் முயற்சிகள் அரசு செய்து வந்தாலும் தொடர்ந்து நீட் தேர்வு நடந்து வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரிடம் உள்ளாடையை கழற்ற சொன்னதாக புகார் கொடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு நடைபெற்றதை அடுத்து, சிறுமியின் தந்தை, கொல்லம் ரூரல் எஸ்பி கேபி ரவியிடம், சம்பவம் குறித்து விசாரணை நடத்தக் கோரி புகார் அளித்தார்.
அந்த புகாரில், கொல்லத்தில் உள்ள ஆயூரில் உள்ள மார்தோமா இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் அண்ட் டெக்னாலஜியில் தேர்வெழுத “பல மாணவர்கள்” தங்கள் உள்ளாடைகளை கழற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், தேசிய தேர்வு முகமை (என்டிஏ) விதித்துள்ள விதிமுறைகளின்படி இது தேவையில்லை என்றும் தந்தை கூறினார். ), இது நீட் நடத்துகிறது.
கேரள மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் மூன்று பேர் தேர்வு முகமை பணியாளர்கள் மற்றும் இரண்டு பேர் ஊழியர்கள் என போலீசார் தகவல்கள் தெரிவித்துள்ளார்கள்.
விசாரணையை மேற்பார்வையிடும் டிஐஜி ஆர் நிஷாந்தினி கூறுகையில், கொல்லத்தில் உள்ள ஆயூரில் உள்ள மார் தாமஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் அண்ட் டெக்னாலஜி தேர்வு மையத்தில் பணியில் இருந்த 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர். “அவர்களில் மூன்று பேர் மாணவர்களை சோதனையிட நியமிக்கப்பட்ட வெளி நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள், மேலும் இருவர் தேர்வு நடைபெற்ற நிறுவனத்தின் ஊழியர்கள். இந்த சம்பவத்தில் அவர்களின் பங்கைக் கண்டறிய அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,” என்றார்.
தேர்வு மைய வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இந்த சம்பவம் நடந்திருப்பது உறுதியாகியுள்ளது.
NTA, திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், யாரிடம் இருந்தும் புகார் வர இல்லை. மேலும் இது தொடர்பாக எந்த மின்னஞ்சலும்/புகாரையும் என்டிஏ பெறவில்லை” என்று என்டிஏ தெரிவித்துள்ளது.