தமிழ் நடிகைகளில் உச்ச நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தமிழில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் நம்பர் 1 இடத்தில் இருக்கும் நயன்தாரா தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கிலும் நம்பர் 1 ஆக இருந்து வருகிறா. ர் இந்நிலையில் இவர் தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.
இவரது காதல்கள் சில தோல்வி அடைந்த பிறகு தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் . இருவரும் கல்யாணம் குறித்து இருவரும் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவும் மற்றும் நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனும் சினிமா வட்டாரத்தில் பல உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நயன்தாரா நடிக்க உள்ள புதிய படமான நெற்றிக்கண் படத்திற்கு விக்னேஸ் சிவன் தயாரிப்பாளர். இந்த படத்தை மிலித் ராவ் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது . வரும் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இந்த படம் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படம் கொரிய மொழியில் உள்ள ஒரு திரைப்படத்தின் தழுவல் ஆகும்.
இந்த படத்தில் நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறா. ர் இந்த படம் நயன்தாராவிற்கு பல வெற்றிகளை குவித்து தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவரை பார்வையற்ற பெண்ணாக நயன்தாரா நடித்தது இல்லை. இதனால் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்து ரசிகர்கள் மிகவும் ஆவலாக படத்தை காண ஆவலாக உள்ளனர்.