நயன்தாரா பல வருடங்களாக விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து வந்தார். வெளிநாடுகள் வெளியிடங்கள் என்று திருமணமாகாமல் சுற்றி வந்த நயன்தாரா. விக்னேஷ் சிவன் அவர்களுடன் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு ஜூன் 9ம் தேதி தான் தனது திருமணத்தை மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் பிரம்மாண்டமான முறையில் நடத்தினார்.
திருமணத்திற்கு விஐபிகள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம் கையோடு திருப்பதிக்கு சென்று ஏழுமலையான் தரிசனம் பெற்று வந்த நயன்தாரா விக்கி பத்திரிகையாளர்களை சந்தித்து விருந்தும் வைத்தனர்.
அதன்பின் சில நாட்களில் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்று இருந்தனர். அங்குள்ள ஹோட்டலில் இருவரும் ரொமான்டிக் புகைப்படங்களை எடுத்து அதனை வெளியிட்டு வந்தனர்.
ஹனிமூன் சென்று வந்த நயன்தாரா வந்த உடனே ஷாருக்கானின் ஜவான் படத்தின் நடிப்பதற்காக புறப்பட்டு சென்றார்.
ஓய்வு நேரத்தில் ஏதாவது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் புதுமண ஜோடிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒரு ரொமாண்டிக் புகைப்படம் ஒன்றை இணையத்தில் தட்டி விட்டுள்ளனர்.
நயன்தாரா நெஞ்சில் விக்னேஷ் சிவன் முகம் வைத்திருப்பது போன்று இருந்த புகைப்படத்தை பார்த்த சிங்கிள்ஸ் அடப்பாவிகளா எங்களை இப்படி உசுப்பேத்தி விடுறீங்களே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.