Home CINEMA NEWS ஷூட்டிங் ஸ்பாட்டில் கையெடுத்து கும்பிட்டு அழுத நயன்தாரா…!!! இணையத்தில் வெளியான வீடியோ இதோ.

ஷூட்டிங் ஸ்பாட்டில் கையெடுத்து கும்பிட்டு அழுத நயன்தாரா…!!! இணையத்தில் வெளியான வீடியோ இதோ.

nayanthara cried in shooting spot

நயன்தாரா, தமிழ் சினிமாவிற்கு வந்து 15 வருடங்கள் ஆகியும் இன்றும் முதல் இடத்தில் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார். ஹரி இயக்கத்தில் “ஐயா” படத்தில் அறிமுகம் ஆன நயன்தாரா முதலில் ஒரு மலையாள சேனல்லில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர்க்கு மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழில் நிறைய படங்கள் நடித்தார். தெலுகு மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு வந்ததால் தெலுங்கு படங்களையும் தேர்ந்து எடுத்து நடிக்க தொடங்கினர்.

தெலுங்குவில் நிறைய படங்கள் நடித்து இருந்தாலும் நயன்தாரா தெலுங்கு சூப்பர்ஸ்டார் பாலகிருஷ்ணா அவர்களுடன் நடித்த ” ஸ்ரீ ராம ராஜ்யம் ” என்ற படத்தில் சீதையாக நடித்து இருந்தார்.

அந்த படத்தில் பாலகிருஷ்ணா அவர்கள் ராமராக நடித்து இருந்தார். நிறைய படங்கள் நடித்து இருந்தாலும் சீதையாக நடித்த இந்த படம் நயன்தாராவிற்கு ஸ்பெஷல்.

இந்த படத்தின் ஷூட்டிங்கை நல்ல படியாக முடித்து கொடுத்த நயன்தாரா மீது மலர்கள் தூவினார்கள் படக்குழுவினர்கள். நயன்தாரா உடனே ஷூட்டிங் ஸ்பாட்டிலே அனந்த கண்ணீரில் அழுதார். அவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு விட்டு இயக்குனரிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று கொண்டார். இதன் வீடியோ இணையத்தில் வெளியானது இதோ.

Exit mobile version