தமிழ் சினிமாவில் ஒரு நடிகை ஒரு வருடமே தாக்குப்பிடிக்க முடியாமல் திரை உலகத்தை விட்டு வெளியேறும் நிலையில் ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்.
தற்பொழுது நயன்தாரா அவர்கள் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை அவருடைய காதல் வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்குகிறார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் அனைத்தும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டு தற்பொழுது படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் சமீபத்தில் தான் நயன்தாரா அந்தப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் வெளியிட்டார்கள் படக்குழுவினர்கள். கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதீஜா என்ற கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர்.
இதற்கிடையில் தனது வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் அவர்களுடன் பல கோவில்களுக்கு சென்று சாமி வழிபாடு செய்து வருகிறார் நயன்தாரா. அது மட்டுமல்ல சில பூஜைகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
கொரோனா காலக்கட்டம் என்பதினால் தனது குடும்பத்தினரை மட்டும் வைத்துக்கொண்டு தனது நிச்சயதார்த்தத்தை சிம்பிளாக செய்த நயன்தாரா தனது திருமணத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளாராம்.
இன்று நயன்தாராவின் 37 வது பிறந்தநாள் என்பதினால் அவரது வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் பிறந்தநாளை நேற்று நள்ளிரவு பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார். ஒரு பெரிய கேக்கில் NAYAN என்று வடிவமைக்கப்பட்ட இருந்தது மற்றொரு கேக்கில் ஹாப்பி பர்த்டே லேடி சூப்பர் ஸ்டார் என்று வடிவமைக்கப்பட்டிருந்தது.
நயன்தாரா கேக் வெட்டி தனது காதல் கணவரின் தோளில் எமோஷனலாக சாய வானில் வான வேடிக்கை படபடவென்று வெடிக்க தனது வருங்கால மனைவிக்கு சினிமா பாணியில் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினார் விக்னேஷ்.