Home NEWS தமிழ்நாட்டில் 15 வயது சிறுமியை நாசமாக்கிய முன்னாள் எம்.எல்.ஏ…!!! கட்சியில் இருந்து நீக்கம்.

தமிழ்நாட்டில் 15 வயது சிறுமியை நாசமாக்கிய முன்னாள் எம்.எல்.ஏ…!!! கட்சியில் இருந்து நீக்கம்.

nanjil murugesan

தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகம் எடுத்தாலும் அவ்வப்போது பாலியல் வன்கொடுமைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்குப் பிறகு நாகர்கோவில் சுஜி என்பவர் பெண்களை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்து அவர்களிடமிருந்து மிரட்டி பணமும் வாங்கி ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அது ஒருபுறமிருக்க புதுக்கோட்டையில் ஜெயப்பிரியா என்ற 7 வயது பச்சிளம் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து அவரைக் கொன்று முட்புதரில் வீசிச் சென்றுள்ளனர்.

தற்பொழுது மீண்டும் நாகர்கோவிலில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. நாகர்கோயில் அடுத்த கட்டுரை சார்ந்த 15 வயது சிறுமி தனது காதலனுடன் கடந்த சில நாட்களாக காணவில்லை என்று அவருடைய பெற்றோர் போலீசாரிடம் புகார் ஒன்று கொடுத்திருந்தார் அந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் தீவிரமாக தேடி இரண்டு பேரையும் கண்டுபிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

15 வயது சிறுமி போலீசாரிடம் தன்னை அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் இரண்டு வருடங்களாக தன்னை சீரழித்து அவர் உட்பட பலர் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் இதற்கெல்லாம் உடந்தையாக இருந்தது என்னுடைய அம்மா இருந்தார்கள் என்று கதறி அழுதுள்ளார். நாகர்கோவில் மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அந்த சிறுமியின் அம்மா மற்றும் உடன் இருந்தோர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியை சீரழித்த நாஞ்சில் முருகேசன் இந்த விஷயம் வெளியில் தெரிந்தவுடன் தலைமறைவாகி விட்டார். அதன்பின் 5 தனிப்படைகள் வைத்து தேடி வந்தனர். நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் அறிந்த அதிமுக கட்சி தலைமை அதிரடியாக நடவடிக்கை எடுத்தது உடனடியாக நாஞ்சில் முருகேசனை கட்சியிலிருந்து நீக்கியது. அதுமட்டுமல்லாமல் கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நாஞ்சில் முருகேசன் நடந்து கொண்டதால் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். சமீபத்தில் கன்னியாகுமரி போலீசார் நாஞ்சில் முருகேசன் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

15 வயது சிறுமியை ஒரு முன்னாள் எம்எல்ஏ சீரழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version