Home CINEMA NEWS சித்ராவின் இறப்பிற்கு பிறகு புதிய முல்லையுடன் ஆரம்பித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் வெளியான புகைப்படம்..!!! சித்ராவை நடிப்பில்...

சித்ராவின் இறப்பிற்கு பிறகு புதிய முல்லையுடன் ஆரம்பித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் வெளியான புகைப்படம்..!!! சித்ராவை நடிப்பில் மிஞ்சுவாரா?

vj chitra replacement

விஜய் டிவியில் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. வானத்தைப் போல மற்றும் ஆனந்தம் படத்தை திரும்ப பார்த்தது போல இருக்கும் இந்த சீரியல். குடும்ப ரசிகர்கள் விரும்பி பார்ப்பது இந்த சீரியல் தான். இந்த சீரியலில் நடிக்கும் அனைவரும் தங்களது நடிப்பை யதார்த்தமாக நடித்து அந்த அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மாபெரும் வரவேற்பைப் பெற்றார் விஜே சித்ரா.

முல்லை போன்ற பெண் நமக்கு வாழ்க்கை துணையாக வர மாட்டார்களா என்று பல இளைஞர்களை அவரது எதார்த்த நடிப்பால் ஏங்க வைத்தவர். முல்லை கதாபாத்திரம் விஜே சித்ராவிற்கு பெரிய பிரபலத்தை மக்களிடம் கொடுத்தது. இந்த சீரியல் கொடுத்த பிரபலத்தால் சித்ராவை பல கடைகளின் திறப்பு விழாவிற்கு அழைத்தார்கள்.

சமீபத்தில் சித்ரா ஏதோ ஒரு சொல்ல முடியாத காரணத்தால் தான் தங்கியிருந்த அறையில் தற்கொலை செய்து கொண்டார். சித்ரா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை ஒரு பக்கம் நடந்து வருகிறது. சித்ராவின் கணவன் ஹேமந்த் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சித்ராவின் கணவர் மோசமானவர் என்று சித்ராவின் நெருங்கிய தோழிகள் ஒரு பக்கம் பேட்டி கொடுத்து வருகிறார்கள். மற்றொரு பக்கம் தன் மகன் எந்த தவறும் செய்யவில்லை சித்ரா கடனின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று ஹேமந்த்தின் பெற்றோர்கள் பேட்டி கொடுத்து வருகின்றனர் ஆனால் சித்ராவின் தாய் ஹேமந்த் தான் என் மகளை கொன்றுவிட்டான் என்று கதறி அழுது மீடியாக்களில் பேட்டி கொடுத்து வருகிறார்.

சித்ராவின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் பாண்டியன் குடும்பமே அவரது உடலைப் பார்க்க பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவமனைக்கு வந்தது. அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சூட்டிங் சித்ரா இல்லாமல் ஆரம்பித்த போது கூட சித்ராவிற்கு அஞ்சலி செலுத்தி அழுதுகொண்டே ஆரம்பித்தார்கள் பாண்டியன் ஸ்டோர் குழுவினர்.

முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவிற்கு பதில் இனி யார் நடிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் சீரியல் ரசிகர்கள். முதலில் நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா சித்ராவின் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூறி இருந்தார்கள் ஆனால் அது உண்மை இல்லை என்று அவரே மறுத்துவிட்டார்.

சித்ராவிற்கு பதில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது காவியா என்பவர் தான் என்று செய்திகள் வந்தது. தற்பொழுது அதனை உறுதிப்படுத்தும் வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய முல்லையுடன் மருமகள்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

Exit mobile version