Home CINEMA NEWS கணவர் இறந்த பிறகு தனது முதல் காதலை பற்றி மனம் திறந்த மீனா..!! இந்த நடிகரையா...

கணவர் இறந்த பிறகு தனது முதல் காதலை பற்றி மனம் திறந்த மீனா..!! இந்த நடிகரையா காதலித்தார் மீனா..?

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் தன் சிறு வயது காலத்தில் இருந்தே சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக நடித்து அதன் பிறகு சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தும் பிரபலமானார். ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் மீனா.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகை மீனாவுக்கு வித்தியாசாகர் என்பவரிடம் திருமணம் ஆனது. மீனா மற்றும் வித்யாசாகருக்கு நைனிகா என்ற ஒரு மகள் உள்ளார். நைனிகாவும் சமீபத்தில் விஜய் நடித்த தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார். திருமணத்துக்கு பிறகு மீனாவிற்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் உள்ளன.

கடைசியாக இவர் தமிழில் ரஜினி நடித்த அண்ணாத்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கடந்த ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது அதனால் அவர் காலமானார். கணவர் இறந்ததிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் மீனா தற்பொழுது சமூக வலைத்தளங்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

தன்னுடைய முதல் காதல் பற்றி ஒரு நிகழ்ச்சியில் மனம் திறந்த மீனா அவரது முதல் காதல் ஹிந்தியில் பிரபல நடிகரான ரித்திக் ரோஷன் ஆகும். பல முறை அவரிடம் தன் காதலை வெளிப்படுத்த முயன்றாரம் அதற்குள் ரித்திக் ரோஷனுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆனதால் அந்த காதலை அவர் சொல்லாமலே விட்டுவிட்டாராம் என்று கூறியுள்ளார்.

Exit mobile version