Home NEWS ஊரடங்கு காலகட்டத்தில் விமானத்தில் நடைபெற்ற திருமணம்!!! வைரலாகும் மதுரை ஜோடி…

ஊரடங்கு காலகட்டத்தில் விமானத்தில் நடைபெற்ற திருமணம்!!! வைரலாகும் மதுரை ஜோடி…

மதுரை தூத்துக்குடி இடையே தொழிலதிபரின் மகன் திருமணம் நடுவானில் விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதுரை கோரிப்பாளையத்தில் சேர்ந்த மரக்கடை அதிபர் மகன் ரமேஷ், மதுரை தொழிலதிபர் மகள் திக்சனா இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இவர்களின் திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்ட பெற்றோர்கள் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு முன்பதிவு செய்தனர்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 7 .30 அளவில் 161 பயணிகளுடன் அந்த விமானம் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டது. இதில் மணமகன் மற்றும் மணமகள் உறவினர்களுக்கு மட்டும் பிரத்தியேகமான அனுமதிக்கப்பட்டனர். இவர்களை தவிர வெளி நபர்களுக்கு அனுமதி இல்லை. விமானத்தில் சென்ற அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொரோனா தொற்றில் இல்லை என்பது உறுதி செய்தபின் அனுமதிக்கப்பட்டனர்.

விமானம் 7:30 மணிக்கு புறப்பட்ட நிலையில் நடுவானில் உறவினர்கள் மத்தியில் மணமகன் மணமகளுக்கு தாலி கட்ட திருமணம் நடைபெற்றது. விமானம் தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு மீண்டும் காலை 9 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. திருமணம் பாராசூட்டில் பறந்து கொண்டு திருமணம் என இதுபோன்ற சம்பவங்களை வெளிநாடுகளில் நடப்பது கேள்விப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் மதுரையில் விமானத்தில் திருமணம் நடத்துவது மிகவும் ஆச்சரியப்படும் வகையில் அமைந்தது.

கொரோனா தொற்று மூன்றாவது அளவு மாற்றம் ஏற்பட்ட நிலையில் இந்த திருமணத்தில் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருந்தாலும், சமூக இடைவெளி இல்லாமல் முக கவசம் அணியாமலும் பங்கேற்று அது தவறானது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version