Home CINEMA NEWS சிம்புவின் மாநாடு படத்தை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் சொன்ன ஒரே வார்த்தை.!!! சந்தோஷத்தில் படக்குழுவினர்.

சிம்புவின் மாநாடு படத்தை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் சொன்ன ஒரே வார்த்தை.!!! சந்தோஷத்தில் படக்குழுவினர்.

maanadu output statisfied producer

சிம்பு பெயருக்கு ஏற்ற மாதிரி நிறைய வம்புகளில் மாட்டி கொண்ட நடிகர். சிம்புவைப் பற்றி கேட்டால் அவர் ஷூட்டிங்குக்கு நேரத்திற்கு வரமாட்டார், சிம்புவை வைத்து படமெடுத்தால் அவ்வளவுதான் என்றெல்லாம் ஒரு நேரத்தில் அடுக்கடுக்காக புகார்களை முன்வைத்து வந்தன தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள். அதுமட்டுமல்லாமல் சிம்புவின் உடல்வாகு நாளுக்கு நாள் ஊதிக்கொண்டே போய்க்கொண்டிருந்தது. சிம்புவின் ரசிகர்களே தயவு செய்து உடம்பை குறையுங்கள் என்று கோரிக்கை வைக்கும் அளவிற்கு இருந்தார் சிம்பு.

திடீரென்று சிம்பு தனது குண்டான உடம்பை கடுமையான உடற்பயிற்சிகளை தினமும் செய்து ஸ்லிம் ஆகி வந்து நின்றார். தன்னால் நின்ற மாநாடு படத்தின் சூட்டிங்கை முடித்துக் கொடுக்கிறேன் என்று வாக்கு கொடுத்தார்.

தனக்கு ஒரு கம்பேக் தேவை என்பதால் மாநாடு சூட்டிங் நடக்கும் முன்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்திருந்தார். மிகக்குறுகிய காலத்திலேயே சூட்டிங் எடுத்து படத்தை மாஸ்டர் படத்துடன் வெளியிட்டனர். படம் ஓகே வாக இருந்தாலும் சிம்புவிற்கு ஒரு பெரிய திருப்பத்தை தரவில்லை காரணம் மாஸ்டருடன் ஈஸ்வரனை ரிலீஸ் செய்தது தான் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

இந்நிலையில் மீண்டும் மும்மரமாக வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தில் நடித்து வரும் சிம்பு எப்படியாவது ஒரு பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு பகலாக உழைத்து வருகிறாராம். சில நாட்களுக்கு முன்பு சிம்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் தரையில் படுத்து உறங்கும் புகைப்படங்கள் எல்லாம் வெளியானது.

சமீபத்தில் மாநாடு படத்தை பார்த்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தைப் பார்த்துவிட்டு இந்தப் படம் வெங்கட் பிரபு மற்றும் சிம்புவிற்கு மைல்கல்லாக அமையும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

தயாரிப்பாளரே படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியதால் செம குஷியில் இருக்கிறார்கள் படக்குழுவினர்.

Exit mobile version