Home NEWS கையடக்க மினி சிபியு கண்டுபிடித்து அசத்திய 9 ஆம் வகுப்பு மாணவன்…!!! நேரில் அழைத்து பாராட்டிய...

கையடக்க மினி சிபியு கண்டுபிடித்து அசத்திய 9 ஆம் வகுப்பு மாணவன்…!!! நேரில் அழைத்து பாராட்டிய தமிழக முதல்வர்.

Mini CPU

கையடக்க கணினி மையச் செயலாக்க கருவி உருவாக்கிய இளம் விஞ்ஞானி எஸ்.எஸ்.மாதவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை திருவாரூர் மாவட்டம் பழவனக்குடி கிராமம் கலைஞர் நகரில் வசித்து வரும் சேது ராசன் மகன் எஸ்.எஸ்.மாதவ் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இவர் கணினியில் மிகுந்த ஆர்வம் கொண்டு கணினி மொழிகளான ஜாவா, சி, சி++ ஆகியவற்றை பிடித்துள்ளார்.கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கையடக்க மினி சிபியு கண்டுபிடித்து உள்ளதாகவும் இதற்காக இரண்டு ஆண்டுகளாக கடுமையாக முயற்சித்து அதில் வெற்றி பெற்றுள்ளார் என்பதை கேள்விப்பட்ட முதல்வர் எஸ்.எஸ்.மாதாவை நேரில் அழைத்து பாராட்டினார்.

இந்த கருவி அனைவரிடத்திலும் சென்றடைய ஏதுவாக Terabyte India CPU Manufacturing Company என்ற நிறுவனத்தைத் தொடங்கி இணையதளம் மூலமாக மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார் என்ற தகவலை கேட்ட அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.

கண்டுபிடிப்பினை பாராட்டிய முதல்வர் கணினி தொடர்பான அவரது ஏற்படுத்தியிருக்கும் ஆராய்ச்சிக்கும் தமிழ்நாடு அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்தார்.

Exit mobile version