தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழில் மாதவனுக்கு ஜோடியாக இரண்டு படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படத்தின் மூலம் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துஇழுத்தார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அவர் நடிப்பில் வெளியான பிரம்மாண்ட தயாரிப்பான பாகுபலி படத்தின் மூலம் புகழ் உச்சிக்கே சென்றார்.
இப்படத்தில் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திலும் தேவசேனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பிறகு காதல் கல்யாணம் என தொடர்ந்து பல கிசுகிசுக்கள் வரத் தொடங்கின. மேலும் இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றினார்.
அதன் பின்னர் உடல் எடையை குறைக்க முடியாமல் போனதால் பட வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் போனது. இந்நிலையில் நடிகை அனுஷ்கா இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் கதை அம்சமாக இருக்கும் என செய்திகள் வெளிவந்துள்ளது.
நடிகை அனுஷ்கா இறுதியாக சிங்கம் மூன்றாம் பாகத்தில் நடித்தது குறிப்பிடதக்கது. இதையடுத்து நடிகை அனுஷ்கா நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வர உள்ளார். மேலும் இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் விரைவில் அனுஷ்காவை திரையில் காண ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.