சமீபகாலமாக இளம் நடிகர்கள் பலர் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். அதுபோல கடந்த ஜூன் மாதம் கன்னடத் திரையுலகின் பிரபல நடிகருமான சிரஞ்சீவி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவருக்கு இளம் வயது இருக்கும் போதே மாரடைப்பு வந்தது கோலிவுட்டில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் பிரபல நடிகரான அர்ஜூனின் மருமகன் முறை ஆகும்.
சிரஞ்சீவி தமிழ் மற்றும் கன்னட நடிகையான மேக்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமாக இருக்கும் சமயத்தில்தான் சிரஞ்சீவி இறந்த சம்பவம் பார்க்கும் மக்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதன் பிறகு மேக்னா என் கணவர் எனக்கு மகனாகப் பிறப்பார் என்று இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். அதுபோலவே மேக்னா விற்கு சீமந்தம் மிகவும் கொண்டாட்டமாக சிரஞ்சீவியின் பெரிய உருவப்படத்துடன் நடைபெற்றது.
அதன் பிறகு சிரஞ்சீவி தம்பி மேக்னாவிற்கு பிறக்கும் குழந்தைக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள தொட்டில் ஒன்றை வாங்கினார். இந்த நிலையில் இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர் குடும்பமே சிரஞ்சீவி மீண்டும் குழந்தையாக பிறந்து உள்ளதாக நம்புகின்றனர். சிரஞ்சீவி இல்லை என்பது மட்டும் அவர் குடும்பத்தினருக்கு மிகவும் வருத்தத்தை அளித்துள்ளது.