Home CINEMA NEWS வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 140 குடும்பங்களுக்கு KPY பாலா செய்த உதவி….!!! மனுஷன் காமெடியன் இல்ல இவர்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 140 குடும்பங்களுக்கு KPY பாலா செய்த உதவி….!!! மனுஷன் காமெடியன் இல்ல இவர் தான் நிஜ ஹீரோ.

kpy bala donates 5 lakhs to flood affected people

KPY பாலா விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர். தான் சுயமாக சம்பாரித்த பணத்தை ஏழை மக்களுக்கு கொடுத்து உதவி வருகிறார்.

ஏற்கனவே ஆம்புலன்ஸ் வாங்கி பழங்குடியின மக்களுக்கு உதவிய பாலா தொடர்ந்து தன்னால் முடிந்த சேவையை செய்து வருகிறார்.

சமீபத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களை வீடு தேடி சென்று அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்து தருகிறார். குறிப்பாக 140 குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுத்து உதவி வருகிறார்.

2 லட்சம் கொடுத்து உதவி செய்த இவர் மக்களுக்கு மேலும் தேவை என்பதால் சீட்டு போட்டு வைத்து இருந்த 3 லட்சம் ரூபாய்யை எடுத்து மீண்டும் உதவி செய்து வருகிறார்.

சேமிப்பு கூட இல்லாமல் சம்பாரிக்கும் பணத்தை அடுத்தவர்களுக்கு உதவி செய்து வாரீங்களே இது பற்றி பாலா அவர்களிடம் கேட்டதற்கு இன்னும் எவ்வளவு நாள் வாழ்க்கை என்பது யாருக்கும் தெரியாது இருக்குற வர மற்றவர்களுக்கு உதவி செய்வோம்.

உதவி செய்ய யாரிடமும் நன்கொடை நான் வாங்குவது இல்லை. நான் சம்பாரித்த பணத்தில் உதவி செய்யும் போது மனசுக்கு ரொம்ப திருப்தியா இருக்கு என்று உருக்கமாக பேசி உள்ளார் KPY பாலா.

Exit mobile version