இளையராஜா தமிழ் சினிமாவில் பல்லாயிரம் கணக்கான பாடல்களை இசையமைத்தவர் இவருடைய குரலில் வெளியான அத்தனை பாடல்களும் மனதுக்கு இதமாக இருக்கும். காலங்கள் மாறிய பின்னும் இன்றும் இளையராஜா அவர்களின் பாடல்கள் பல பேருந்துகள், திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த அளவிற்கு இளையராஜா அவர்களின் இசை மக்களுக்கு ஒருவித தாலாட்டாகவே அமைந்தது. இளையராஜா அவர்களுக்கு 80 வயது பூர்த்தியானதை முன்னிட்டு திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்தார்கள் அவரது குடும்பத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்கடையூரில் இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆயுள் விருத்தி ஹோமம் பூஜை நடத்தினர் அந்த பூஜையில் இயக்குனர் பாரதிராஜா கங்கை அமரன் மற்றும் பிரேம்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர் ஆயுள் விருத்திக்காக நடத்தப்பட்ட பூஜையில் இளையராஜா நன்றாக இருக்க வேண்டும் என்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இளையராஜா ஆயுள் ஹோமம் நடைபெற்ற இடத்தில் அனைவரும் கலந்து கொள்ள இளையராஜா அவர்களின் மூத்த மகன் யுவன் மட்டும் மிஸ்ஸிங்.