Home NEWS கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட சிறையில் விரதம் இருந்து பூஜை செய்தேன். மக்கள் நலன் தான்...

கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட சிறையில் விரதம் இருந்து பூஜை செய்தேன். மக்கள் நலன் தான் முக்கியம் – சசிகலா.

sasikala pray for people in jail

சசிகலா அக்ரஹாரா சிறையிலிருந்து வெளிவந்த நாளில் இருந்து சசிகலா அரசியலுக்கு வரப்போகிறார் அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்று செய்திகள் வந்து கொண்டு இருந்ததுஆனால் சிறையை விட்டு வெளியே வந்த சசிகலா தேர்தல் நேரத்தில் எந்த ஒரு குழப்பமும் நடைபெற்று விடக்கூடாது என்று தெளிவாக இருந்தார்.

தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நாளிலிருந்து சசிகலா அதிமுக தொண்டர்கள் உடன் செல்போனில் உரையாடி வருகிறார். அந்த உரையாடலில் நான் விரைவில் கட்சியை வழிநடத்த வருவேன் என்று கூறிவருகிறார் அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையை பிடிக்காத ஒரு சிலர் சசிகலாவிற்கு கால் செய்து அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தியும் வருகின்றனர்.

இதனைப் பார்த்த இபிஎஸ் தரப்பு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி சசிகலாவிடம் உரையாடினால் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தது. அதை மீறி சசிகலாவிடம் பேசியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தது.

சசிகலாவின் ஆடியோ வரிசையாக வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான ஆடியோவில் செல்வி ஜெயலலிதா அவர்களின் பெற்றெடுத்த அம்மா காப்பாற்றிய காலங்களை விட அதிக வருஷங்கள் நான் ஜெயலலிதா அவர்களை பாத்திருக்கேன் அவங்க அம்மாவுக்கு மேலே இருந்து நான் அவங்கள பாதுகாத்து வைத்திருந்தேன் அதுதான் நான் செய்த பாக்கியம் என்று நினைத்துக் கொள்கிறேன் என்று கூறிய அவர் நான் சிறையில் உட்கார்ந்துகொண்டு மக்களுக்கு கொரோனா வந்துவிட்டது என்று நான் செய்யாத பூஜை கிடையாது மாதக்கணக்கில் விரதமிருந்து இந்த கொரோனா தாக்கம் குறைய வேண்டும் மக்கள் நலமாக இருக்க வேண்டும் கொரோனாவில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று சிறையில் இருந்து பூஜை செய்தேன்.

அதுபோல தற்பொழுது கோவிலுக்கு அர்ச்சனைக்கு சென்றால் கூட அம்மா நன்றாக இருக்கவண்டும் தமிழ்நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் வேண்டுவேன் என்று கூறி உள்ளார்.

சிறையிலிருந்து கொரோனவை விரட்ட பூஜை செய்தது உள்ளார் நம்ம சின்னம்மா என்று புகழ்ந்து வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

Exit mobile version