Home NEWS 3 ஆண்டுகளாக மனைவிக்காக அச்சுஅசலாக தாஜ்மஹால் போல் வீடு கட்டி பரிசளித்த கணவன்…!!!

3 ஆண்டுகளாக மனைவிக்காக அச்சுஅசலாக தாஜ்மஹால் போல் வீடு கட்டி பரிசளித்த கணவன்…!!!

Taj mahal

காதலின் அடையாளம், கட்டிட கலையின் மகத்துவம் உலக அதிசயங்களில் ஒன்று என அனைவராலும் போற்றப்படும் பிரம்மாண்டமான திகழ்கிறது. தாஜ்மஹால் சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் அற்புதங்களில் ஒன்றாகும் இது இருக்கிறது.

இந்திய கட்டடக் கலைகளில் உருவான தாஜ்மஹால் தொடர்ந்து 22 ஆண்டுகளாக கட்டப்பட்டது. இதை கட்டுவதற்கு 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றினர் என்பது வரலாறு. இன்னும் தாஜ்மஹால் குறித்த பின்னணி வரலாறு பலருக்கும் தெரியாது.

காதலின் சின்னம் கல்லறை உலக அதிசயம் என்றெல்லாம் போற்றப்படும். தாஜ்மஹால் மத்திய பிரதேச மாநிலம் புர்கான்பூர் நகரில் வசித்து வருபவர் ஆனந்த் பிரகாஷ் சௌக்சே. அவரது மனைவி மஞ்சுஷா சௌக்சேகாக தாஜ்மஹால் போன்ற ஒரு வீட்டைக் கட்டி பரிசாக கொடுத்துள்ளார்.

அவரது மனைவி மட்டுமல்லாமல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அவர் கட்டிய தாஜ்மஹால் போல் உள்ள வீட்டில் 6 படுக்கை அறைகள், ஒரு சமையலறை மற்றும் ஒரு நூலக அறை போன்றவைகளை கொண்டு மொத்தம் கிட்டத்தட்ட 8100 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக அமைத்துள்ளார்.

வங்கதேசத்தில் உள்ள கைவினை கலைஞர்களை கொண்டு இந்த வீடு வடிவமைத்துள்ளார். இந்த வீடு குறித்து அவர் கூறுகையில் “ஒரு நாள் என் மனைவி மஞ்சுஷா அவரிடம் எனக்காக என்ன செய்வீர்கள்” என்று கேட்டதற்கு நான் உனக்காக தாஜ்மஹால் பரிசளிப்பேன் என்று கூறினேன்.

ஆகையால் நான் தாஜ்மஹால் போல வீடு கட்ட திட்டமிட்டேன். அதன்படி என் மனைவிக்கு பரிசளித்து இருக்கிறேன். இவரின் இந்த செயலைக் கண்டு பலரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version