Home NEWS மயிலாடுதுறை அருகே திடீரென கொழுந்துவிட்டு எரிந்த அரசு பேருந்து…!!! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணியர்.

மயிலாடுதுறை அருகே திடீரென கொழுந்துவிட்டு எரிந்த அரசு பேருந்து…!!! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணியர்.

bus

மயிலாடுதுறை அருகே புதுச்சேரி அரசு பஸ் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி அரசு மயிலாடுதுறையில் இருந்து 20 பயணிகள் உடன் காரைக்காலுக்கு நேற்று காலை சென்றது. டிரைவர் செந்தில் (40) ஓட்டினார், கண்டக்டர் பரசுராமன் (46) பணியில் இருந்தார்.

பொறையார் ராஜீவ் புரம் என்ற இடத்தில் பஸ் இன்ஜினில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது. டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.

பயணியர் கீழே இறங்கியதால் காயமின்றி தப்பினர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். முன்புறம் தீயில் எரிந்து சேதம் அடைந்தது.

Exit mobile version