முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிகாலை முதலே லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். மேலும் ரெய்டை தொடர்ந்து வழக்கு பதியப்பட்டுள்ளது. ஏ1 ஆக விஜயகுமாருக்கும், ஏ 2வாக மனைவி ரம்யா பெயரையும் சேர்க்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் விஜயகுமார் 2016 பின் 27 கோடி ரூபாய் வரை முறைகேடாக சொத்து சேர்த்து இருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. அதோடு ஐந்து வருடங்களில் முறைகேடாக ஒப்பந்தங்கள் லஞ்சங்கள் மூலம் சொத்து சேர்க்கப்பட்டுள்ளதாக எப்ஐஆர் பதிவில் கூறப்பட்டுள்ளது. லஞ்ச படத்தின் மூலம் 14 கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்ட தாக எப்ஐஆர் பதிவு தெரிவிக்கப்பட்டது.
பதவி காலத்தில் முறைகேடாக டிப்பர் லாரிகள், ஜேசிபி இயந்திரங்கள் சிறிய ரக லாரிகள் போன்றவற்றை வாங்கியதாக எப்ஐஆர் பதிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சொத்துக்கள் பினாமி பெயரில் வாங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே விஜயகுமாரின் தம்பி, தங்கைகள், மாமனார் வீடுகளில் கூட ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. விஜயகுமார் தனது மனைவி பெயரில் மட்டுமே கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.