Home NEWS தமிழகத்திற்கு வருவதற்கு நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!!! மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம்.

தமிழகத்திற்கு வருவதற்கு நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!!! மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம்.

epass must in tamilnadu

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 5,441 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை ஏப்ரல் 10 நாளை அமல்படுத்த உள்ளது.

குறிப்பாக பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

அலுவலக பணி, மருத்துவம், தொழில் குறித்த எந்த காரணங்களை கூறினாலும் இ-பாஸ் இல்லாதவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொது இடங்களில் முக கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது.

வெளி மாநிலத்தில் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களால் கொரோனா தமிழ்நாட்டிற்கு பரவி விடக்கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது தமிழக அரசு.

Exit mobile version